செய்திகள் இந்தியா
உன்னாவ் பாலியல் வன்கொடுமை: சிறுமியின் வீட்டிற்கு தீ வைத்த குற்றவாளிகள்
உன்னாவ்:
உத்தரப் பிரதேம், உன்னாவ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு ஜாமீனில் வந்த 2 குற்றவாளிகள் தீ வைத்தனர். இதனால், அச்சிறுமியின் 6 மாத குழந்தை, 2 வயது சகோதரி ஆகிய 2 குழந்தைகளும் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றன.
உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.
இதனால், அச்சிறுமிக்கு கடந்த செப்டம்பரில் ஆண் குழந்தை பிறந்தது.
இது தொடர்பான வழக்கில் சிறையிலிருந்த குற்றவாளிகள் 2 பேர் அண்மையில் ஜாமீனில் வெளிவந்தனர்.
கடந்த திங்கள்கிழமை மாலை, நண்பர்கள் 5 பேருடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டுக்குச் சென்ற குற்றவாளிகள், வழக்கைத் திரும்ப பெற சிறுமியின் தாயாரைக் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
அதற்கு சிறுமியின் தாயார் மறுத்துவிட, அவரைத் தாக்கிய குற்றவாளிகள் வீட்டுக்குத் தீ வைத்துள்ளனர்.
சிறுமியின் 6 மாத குழந்தை 35 சதவீத தீக்காயங்களுடனும், 2 வயது சகோதரி 45 சதவீத தீக்காயங்களுடனும் மீட்கப்பட்டு உன்னாவ் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
குற்றவாளிகள் நடத்திய தாக்குதலால் சிறுமியின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am