செய்திகள் தமிழ் தொடர்புகள்
சீர்காழி சட்டை நாதர் ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட தேவார செப்பேடுகள்
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சீர்காழி சட்டை நாதர் ஆலயத்தில் தெய்வத் திருமேனிகள் மற்றும் தேவார செப்பேடுகள் கண்டுடெக்கப்பட்டுள்ளன.
மயிலாடுதுறை சட்டைநாதர் ஆலயத்தில் கிடைக்கப்பெற்றவை 22 ஐம்பொன் சிலைகள் , 55 பீடம், 100க்கும் மேற்பட்ட செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள்.
சைவ மரபின் தலைமைக் குறவரான சம்பந்தப் பெருமான் அவதரித்தருளிய சீர்காழியில் தேவாரப் பாடல்கள் எழுதப்பட்ட 400க்கும் மேற்பட்ட செப்பேடுகள் கிடைத்துள்ளன.
தமிழக வரலாற்றிலேயே இத்தகைய செப்பெடுகள் பெரிய அளவில் இதற்கு முன் கண்டெடுத்ததில்லை என்று சொல்லப்படுகிறது.
தேவாரத் திருமுறைகளை செப்பேடுகளில் எழுதி வைத்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
ஆனால், இப்போதுதான் முதன்முறையாக தேவாரத் திருப்பாடல்கள் எழுதப்பட்ட செப்பேடுகள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கிடைத்துள்ளன.
இவற்றில் இதுவரை கிடைக்காத தேவாரப் பாடல்கள் உள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும் என்று தொல்லியலாளர்கள் கூறியுள்ளனர்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
April 23, 2024, 5:20 pm
Aadhar Card: பெயர், முகவரி, பிறந்த தேதி மாற்றங்களுக்கு இனி கட்டணம் செலுத்த வேண்டும்
April 21, 2024, 11:23 am
மலேசியாவிலிருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட அபூர்வ வகை ஆமைக் குஞ்சுகள்
April 19, 2024, 11:24 pm
தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு: சத்யபிரத சாஹு
April 19, 2024, 12:32 pm
நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் காலை 10 மணி நிலவரப்படி 14.05 சதவிகித வாக்குகள் பதிவு
April 19, 2024, 11:47 am