நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாஜகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் முதல்வர்

புது டெல்லி: 

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்த கிரண் குமார் ரெட்டி பாஜகவில் இணைந்தார்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்படாததற்கு முன்பு காங்கிரஸ் முதல்வராக இவர் இருந்தார்.

கடந்த மாதம் காங்கிரஸில் இருந்து கிரண் குமார் ரெட்டி விலகினார்.

இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், காங்கிரஸ்  தலைமை மக்களின் தீர்ப்பை ஏற்று திருத்திக் கொள்ள மறுத்து வருகிறது.

ராகுல் காந்தி தானாகவும் சிந்தித்து முடிவெடுக்க மாட்டார். மற்றவர்கள் கூறும் நல்ல ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்.

காங்கிரஸ் கட்சியை அதன் தலைமை முழுமையாகச் சீரழித்துவிட்டது.

காங்கிரஸுடன் 70 ஆண்டுகளாக நல்லுறவு உண்டு. காங்கிரஸில் இருந்து விலகுவோம் என்று ஒருநாளும் எண்ணம் தோன்றியதில்லை.

ஆனால், அந்த முடிவுக்குத் தள்ளப்பட்டுவிட்டேன். கட்சித் தலைமை காங்கிரஸ் கட்சியை முழுமையாகச் சீர்குலைத்துவிட்டது என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset