நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியர் விவகார நடவடிக்கை குழு அமைக்கப்படுமா?: மக்களவையில் டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி

கோலாலம்பூர்:

இந்தியர் விவகார நடவடிக்கை குழு அமைப்படுமா என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் பிரச்சினைகளை கண்காணிக்கவும் அதற்கு உரிய தீர்வு காணும் வகையிலும் இந்தியர் விவகார நடவடிக்கை குழு அமைக்கப்படுவது அவசியமானதாக உள்ளது.

இக்குழு அமைக்கப்படுமா அல்லது ஆலோசனைகளுடன் காணாமல் போய்விடுமா என்று டத்தோஸ்ரீ சரவணன் கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு பிரதமர் துறை அமைச்சர் டத்தோ அர்மிஸான் முஹம்மத் அலி பதிலளித்தார். அவர் கூறியதாவது,

இந்தியர் விவகார நடவடிக்கை குழு அமைக்கப்டுவது குறித்து மனிதவள அமைச்சர் பரிந்துரைகளை முன்வைத்து உள்ளார்.

இருந்தாலும் இக்குழு அமைக்கப்டுவது மிகவும் ஆரம்பக் கட்டத்தில் அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset