செய்திகள் உலகம்
அமெரிக்காவுக்கு எதிராகப் போர் புரிய வட கொரியா தயார்
பியாங்காங் :
அமெரிக்காவுக்கு எதிராக போர் புரிய எட்டு லட்சம் பேர் ராணுவத்தில் இணைய ஆர்வமாக இருப்பதாக வடகொரிய அரசு அறிவித்துள்ளது. கிழக்காசிய நாடான வட கொரியா தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை வைத்து தன் அண்டை நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பானை அச்சுறுத்தி வருகிறது.
இதற்கு முன் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து கொரிய தீபகற்பத்தில் போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
வட கொரியாவின் 'ரோடங் சின்முன்' என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் அமெரிக்காவுக்கு எதிராகப் போரிட எட்டு லட்ச மக்கள் வ்ட கொரிய இராணுவத்தில் இணைய ஆர்வமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதில் பெரும்பாலானோர் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் வட கொரியா 'வாசாங்போ-17' என்ற கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனையை நடத்தியது. இதை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியதுடன் போரைத் துாண்டும் வகையில் ஈடுபடும் அமெரிக்காவுக்கும் தென்கொரியாவுக்கும் எச்சரிக்கை விடுக்கவே இந்த ஏவுகணை பரிசோதனை என்றும் குறிப்பிட்டுள்ளது.
வட கொரிய தலைநகர் பியாங்காங்கின் சுனான் என்ற பகுதியிலிருந்து கிழக்கு கடல்பகுதியில் குறுகிய இலக்கை சென்று தாக்கக்கூடிய ஏவுகணை பரிசோதனையை வட கொரியா நேற்று நடத்தியது. மேலும், வட கொரிய அரசின் இத்தகைய நடவடிக்கைகளை தொடர்ந்து கூர்ந்துகண்காணித்து வருவதாக தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது.
ஆதாரம்: Reuters
- அஸ்வினி
தொடர்புடைய செய்திகள்
December 20, 2025, 12:31 pm
தைப்பே சுரங்க ரயில் நிலையங்களில் தாக்குதல்: 4 பேர் பலி
December 20, 2025, 10:04 am
பிரவுன் பல்கலைக்கழக துப்பாக்கிச்சூடு எதிரொலி: கிரீன் கார்டு திட்டத்தை நிறுத்த டிரம்ப் உத்தரவு
December 19, 2025, 9:54 pm
ஆஸ்திரேலியத் தாக்குதலைத் தடுத்த அஹ்மதுக்கு $2.5 மில்லியன் நிதி
December 17, 2025, 1:41 pm
பாலஸ்தீன மக்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை: அமெரிக்க அரசு அறிவிப்பு
December 15, 2025, 6:54 pm
சிறுநீரகப் பாதிப்பினால் அவதிப்படுவோர் எண்ணிக்கையில் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது சிங்கப்பூர்
December 15, 2025, 4:19 pm
ஆஸ்திரேலிய கடற்கரையில் தீவிரவாதியுடன் தனி ஒருவராக நின்று போராடிய அஹமது அல் அஹமது
December 14, 2025, 9:43 pm
ஆஸ்திரேலிய கடற்கரையில் துப்பாக்கிச் சூடு: 12 பேர் பலி
December 14, 2025, 6:33 pm
சிங்கப்பூரில் 2 பேருந்துகள் மோதல்: 44 பேர் மருத்துவமனையில் அனுமதி
December 13, 2025, 10:57 am
மியான்மர் ராணுவ தாக்குதலில் மருத்துவமனை தரைமட்டம்: 34 பேர் உயிரிழந்தனர்
December 12, 2025, 12:54 pm
