
செய்திகள் இந்தியா
கிழக்கு லடாக் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது
புது டெல்லி:
கிழக்கு லடாக் எல்லையின் பல்வேறு பகுதிகளில் இந்தியாவும், சீனாவும் ராணுவப் படைகளைத் திரும்பப் பெற்றுள்ளபோதிலும், சில இடங்களில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
தில்லியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியதாவது:
எல்லை விவகாரம் தொடர்பாக அமைதி நிலைநாட்டப்படும் என்ற புரிந்துணர்வை இந்தியாவும் சீனாவும் 2020ஆம் ஆண்டு வரை கொண்டிருந்தன. எல்லைப் பகுதிகளில் படைகளை அதிக எண்ணிக்கையில் குவிக்கக் கூடாது என இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் உள்ளன.
கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சீன ராணுவத்தினர் அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் தனது படைகளை எல்லைகளில் குவித்தது.
இரு நாடுகளின் ராணுவப் படைகளும் வெகு அருகிலேயே நிலைநிறுத்தப்பட்டுள்ளன. எனவே, சூழல் எப்போது வேண்டுமானாலும் தீவிரமாக மாற வாய்ப்புள்ளது. ராணுவக் கண்ணோட்டத்தில் இது அபாயகரமானதும் ஆகும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 4:08 pm
முகத்தில் குத்துவிட்ட எம்எல்ஏ மீது முதல்வர் கூறியபின் போலிசார் வழக்குப் பதிவு
July 12, 2025, 2:10 pm
75 வயதை எட்டியவுடன் மோடி பதவி விலக ஆர்எஸ்எஸ் சூசக அறிவிப்பு
July 11, 2025, 10:02 pm
மாதவிடாய் என்று கூறி ஆடைகளை களைந்து சோதனை: பள்ளி முதல்வர், 4 பேர் கைது
July 11, 2025, 9:51 pm
5 நாடுகளின் பயணத்தை முடித்த மோடி எப்போது மணிப்பூர் செல்வார்: காங்கிரஸ் கேள்வி
July 10, 2025, 8:54 pm
உணவு விடுதியின் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட சிவசேனா எம்எல்ஏ
July 10, 2025, 5:12 pm
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமரை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ் விமர்சனம்
July 9, 2025, 9:55 pm
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை
July 9, 2025, 9:49 pm