செய்திகள் இந்தியா
கிழக்கு லடாக் பகுதியில் பதற்றம் நீடிக்கிறது
புது டெல்லி:
கிழக்கு லடாக் எல்லையின் பல்வேறு பகுதிகளில் இந்தியாவும், சீனாவும் ராணுவப் படைகளைத் திரும்பப் பெற்றுள்ளபோதிலும், சில இடங்களில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
தில்லியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியதாவது:
எல்லை விவகாரம் தொடர்பாக அமைதி நிலைநாட்டப்படும் என்ற புரிந்துணர்வை இந்தியாவும் சீனாவும் 2020ஆம் ஆண்டு வரை கொண்டிருந்தன. எல்லைப் பகுதிகளில் படைகளை அதிக எண்ணிக்கையில் குவிக்கக் கூடாது என இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் உள்ளன.
கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சீன ராணுவத்தினர் அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் தனது படைகளை எல்லைகளில் குவித்தது.
இரு நாடுகளின் ராணுவப் படைகளும் வெகு அருகிலேயே நிலைநிறுத்தப்பட்டுள்ளன. எனவே, சூழல் எப்போது வேண்டுமானாலும் தீவிரமாக மாற வாய்ப்புள்ளது. ராணுவக் கண்ணோட்டத்தில் இது அபாயகரமானதும் ஆகும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 19, 2024, 1:28 pm
பாஜக தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினர் என குறிப்பிடப்பட்டவில்லை: அசாதுதீன் ஓவைசி
April 19, 2024, 1:04 pm
சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேல் கப்பலில் இருந்து கேரளம் திரும்பிய பெண் மாலுமி
April 19, 2024, 11:10 am
மலேசியாவிலிருந்து சென்னைக்கு போலி கடப்பிதழில் வந்த பெண் உட்பட 2 பேர் கைது
April 18, 2024, 10:22 pm
ஹெலிகாப்டர், தனி விமான விவரங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு
April 18, 2024, 9:48 pm
ஊழலின் சாம்பியன் மோடி: ராகுல் காந்தி
April 18, 2024, 8:36 am
சத்தீஸ்கரில் 29 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
April 16, 2024, 10:54 pm
சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்திய 2 பேர் கைது
April 16, 2024, 10:49 pm
அரசியல் சாசனத்தை அகற்ற பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சி: ராகுல்
April 15, 2024, 5:16 pm