
செய்திகள் வணிகம்
மேலும் 10 ஆயிரம் ஊழியர்களை நீக்கம் செய்தது மெட்டா
நியூயார்க்:
மேலும் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மெட்டா முடிவெடுத்துள்ளது.
இதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் நிறுவனத்தின் நிதிநிலையை சீர் செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் பல்வேறு நாடுகளில் மெட்ட நிறுவனத்துக்கு அலுவலகங்கள் உள்ளதால் அத்துறை சார்ந்த பணியாளர்கள் இடையே இந்த பணிநீக்க உத்தரவு பெறும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஃபேஸ்புக் கடந்த ஆண்டு நவம்பரில் 11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. இப்போது, மேலும் 10,000 ஊழியர்களை வெளியேற்ற முடிவெடுத்துள்ளது.
சர்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சி தொடர்ந்து குறைந்து வருவது போன்ற காரணங்களால் இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாததாகிவிட்டதாக நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸுக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் நிறுவனம் தொடங்கப்பட்டு 18 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், கடந்த நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட ஆள்குறைப்பு நடவடிக்கைதான் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 2:16 pm
மும்பையில் அமைகிறது முதல் டெஸ்லா ஷோரூம்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm