
செய்திகள் கலைகள்
மலேசியக் கலைஞர்களை ஒன்றிணைக்கும் கெத்து 1.0 மாபெரும் இசை விழா
கோலாலம்பூர்:
மலேசியக் கலைஞர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் மாபெரும் இசை விழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
எம்ஒய்எஸ்எம், யூஅண்ட்ஐ நிறுவனங்களின் ஏற்பாட்டில் கெத்து 1.0 எனும் இந்த இசை விழா நடைபெறவுள்ளது.
இந்த இசை விழா வரும் ஏப்ரல் 15ஆம் தேதி இரவு 7.01 மணிக்கு ஷீப் கோலாலம்பூர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மலேசியாவில் தற்போது அதிகமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்த வரிசையில் மலேசிய கலைஞர்களாலும் தரமான நிகழ்ச்சியை நடத்த முடியும்.
மேலும் அனைத்து கலைஞர்களும் ஒன்றாக இணைந்து மாபெரும் நிகழ்ச்சியை நடத்த முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த விழாவில் 30க்கும் மேற்ப்பட்ட மலேசிய கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் தங்களின் படைப்புகளை படைக்கவுள்ளனர்.
ரசிகர்களை மகிழ்விக்கும் அனைத்து அங்கங்களும் இந்த விழாவில் உள்ளது.
நிகழ்ச்சி நடைபெறும் அரங்கம் மிகவும் பிரமாண்டமாக நடைபெறும். இதில் 2,500 பேர் அமரலாம்.
இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் தற்போது விற்பனையில் உள்ளது. மிகவும் நியாயமான விலையில் இந்த டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது.
ஆகவே மலேசிய மக்கள் இவ்விழாவுக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும் எனறு எம்ஒய்எஸ்எம் நிறுவனத்தின் இயக்குநர் அமிகோஸ் சுகு கூறினார்.
இந்நிகழ்ச்சி குறித்த மேல்விவரங்களுக்கு அமிகோஸ் சுகுவை 012-7100464 தொடர்பு கொள்ளலாம்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 22, 2023, 11:12 am
உயிரோடு இருக்கும் நடிகர் கோத்தா சீனிவாச ராவுக்கு அஞ்சலி; பாதுகாப்புக்குச் சென்ற போலீசார் அதிர்ச்சி
March 21, 2023, 12:39 pm
இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளில் கந்தாரா திரைப்படம் டப்பிங் செய்யப்படவுள்ளது.
March 20, 2023, 12:04 pm
ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை
March 19, 2023, 5:17 pm
ரசிகர்களைக் கவர்ந்த சந்தோஷ் நாராயணின் இசை நிகழ்ச்சி
March 13, 2023, 5:21 pm
ஆஸ்கர் வென்ற இந்தியர்களுக்குத் தலைவணங்குகிறேன் : நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
March 13, 2023, 12:55 pm
அடையாளம் தெரியாத ஆடவரால் உள்ளூர் நடிகர் கமால் அட்லி தாக்கப்பட்டார்
March 13, 2023, 11:24 am
ஆஸ்கர் விருதினை வென்றது 'RRR' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல்
March 13, 2023, 10:33 am
ஆஸ்கர் விருதை வென்றது இந்தியாவின் ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்'
March 9, 2023, 5:59 pm