செய்திகள் கலைகள்
என் படத்திற்கு சென்சார் போர்ட் 48 கட்டுகள் கொடுத்தது: மனம் திறந்த நடிகர் ஜீவா
சென்னை:
'பேமிலி' படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில், ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'தலைவர் தம்பி தலைமையில்'.
இப்படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிராத்தனா நாதன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
இப் படம் வரும் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (ஜன.11) நடைபெற்றது.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜீவா சென்சார் போர்டு விவகாரம் குறித்துப் பேசியிருக்கிறார்.
"நான்தான் சென்சாரின் பிராண்ட் அம்பாசிடர். நான் நடித்த 'ஜிப்சி' படத்தில் 48 கட்டுகள். என்னைத்தான் முதலில் வெச்சு செய்தார்கள்.
சென்சார் எல்லாம் தாண்டி வந்தால் கொரோனா வைரஸ் வந்துவிட்டது. இந்த இரண்டு 'C'யும் எங்களுக்கு நிறைய கஷ்டத்தைக் கொடுத்தது" என்று ஜீவா பேசியிருக்கிறார்.
அதேபோல், மீண்டும் விஜய் நடிக்க வந்தால் அவருடன் இணைந்து நடிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 6, 2026, 5:41 pm
எனது முழு பெயர் தபசும் ஃபாத்திமா: மனம்திறந்த நடிகை தபு
January 31, 2026, 10:45 am
சிறந்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சிறந்த நடிகர் தனுஷ்: தமிழக அரசு விருதுப் பட்டியல் அறிவிப்பு
January 26, 2026, 6:53 pm
மலையாளத் திரைப்படமான Patriot வெளியீட்டு நாள் அறிவிப்பு
January 20, 2026, 12:24 pm
Gegar Vaganza பாட்டுத்திறன் போட்டியில் சிங்கப்பூர்ப் பாடகர் இஸ்கண்டார் இஸ்மாயில் வாகை சூடினார்
January 19, 2026, 5:10 pm
ரஹ்மான் இந்தியாவின் நவீன அடையாளங்களின் ஒருவர்: அவரை குறை கூறுபவர்கள் அவர் இடத்தை நெருங்க முடியாது
January 7, 2026, 11:32 pm
மலேசியாவில் ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு
January 7, 2026, 10:29 pm
‘ஜனநாயகன்’ வெளியீட்டில் சிக்கல்: தணிக்கை வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பு எப்போது?
January 2, 2026, 5:10 pm
