நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாகலமாக நடைபெற்று வருகிறது பினாங்கு தைப்பூசம்

ஜார்ஜ்டவுன்:

பினாங்கு மாநில தைப்பூச விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

கோவிட்-19 தொற்று தாக்கத்தால் கடந்த ஈராண்டுகளாக பினாங்கு மாநிலத்தில் தைப்பூச விழா மிதமான அளவில் கொண்டாடப்பட்டது.

ஆனால் இம்முறை மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

தங்க, வெள்ளி ரத ஊர்வலத்துடன் பினாங்கில் மூன்று நாட்களுக்கான தைப்பூச விழா தொடங்கி உள்ளது.

பினாங்கு மாநிலத்தில் இது 237 ஆவது தைப்பூசமாகும்.

இதனால் லட்சக் கணக்கான பக்தர்கள் பினாங்கில் குவிந்துள்ளனர். பக்தர்கள் தொடர்ந்து தங்களின் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset