செய்திகள் மலேசியா
கூரியர் மூலம் கடத்தப்பட்ட 2.4 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருட்களை சுங்கத்துறையினர் கைப்பற்றினர்
நீலாய்:
கூரியர் மூலம் கடத்தப்பட்ட 2.4 மில்லியன் ரிங்கிட் போதைப்பொருட்களை சுங்கத்துறையினர் கைப்பற்றினர்.
இதனை சுங்கத்துறையின் துணை இயக்குநர் சஷாலி முகமத் உறுதிப்படுத்தினார்.
கடந்த ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 23 வரையில் மூன்று கடத்தல் நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டுள்ளது.
70 கிலோ கிராம் எடைக் கொண்ட பல்வேறு போதைப் பொருளில் மொத்த மதிப்பு 2.4 மில்லியன் ரிங்கிட்டாகும்.
முதல் சம்பவத்தில் கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து சபாவிற்கு கூரியரைப் பயன்படுத்தி இப்பொருட்கள் அனுப்பப்பட்டது.
ஹார்டுவேர் வணிகம் செய்யும் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி இப்போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளது.
இரண்டாவது சம்பவத்தில் சீன மூலிகை தேநீர் பொட்டலத்தில் மறைத்து போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளது.
இப்படி பல கடத்தல் முயற்சிகளை அதிகாரிகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm
பைசால் மீது ஆசீட் வீசிய ஆடவருக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல்: ஐஜிபி
May 6, 2024, 2:26 pm