
செய்திகள் உலகம்
தாய்லாந்தில் கோர விபத்து: 11 பேர் உடல் கருகி பலி
பேங்காக்:
தாய்லாந்தில் சாலை தடுப்பு வேலியில் மோதி தீப்பிடித்ததால், வேனில் இருந்த 11 பேர் உடல் கருகி பலியாகினர்.
தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள அம்னாட் சரோயன் மாநிலத்தில் இருந்து நகோன் பாத்தோம் மாநிலத்திற்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.
வேனில் 2 சிறுவர்கள் உள்பட 12 பேர் இருந்தனர்.
எரி வாயு மூலம் இயங்கும் இந்த வேன் தலைநகர் பாங்காங் அருகே ஷி கியூ மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால், தறிக்கெட்டு ஓடிய வேன் சாலையின் நடுவே இருந்த தடுப்பு வேலியின் மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் வேனில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து வேனில் தீப்பிடித்தது.
தீ பரவுவதற்கு முன்பு 20 வயது இளைஞர் ஒருவர் மட்டும் வேனில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பினார்.
சிறுவர்கள் உள்பட மற்ற 11 வெளியேற முடியாமல் வேனுக்குள் சிக்கினர். இதில் அவர்கள் 11 பேரும் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 2, 2023, 2:23 pm
ஈரானில் இளம் ஜோடி தெருவில் கட்டிப்பிடித்து நடனம்; வைரலான வீடியோ: 10 வருடம் சிறை
February 2, 2023, 2:04 pm
அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி நிக்கி ஹாலே போட்டி?
February 1, 2023, 12:21 am
உங்கள் டிக்கெட் உங்கள் விசா: சவுதி அரசு அறிமுகம்
January 31, 2023, 8:56 pm
ஆஸ்திரேலியா: இந்தியர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்
January 31, 2023, 5:50 pm
சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்
January 31, 2023, 1:51 pm
சீனப் புத்தாண்டு பரிசு: 61 மில்லியனை ஊழியர்களுக்கு வழங்கி மகிழ்ந்த சீன சுரங்க நிறுவனம்
January 31, 2023, 8:32 am
பாகிஸ்தான் பெஷாவரில் குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு - 100 பேர் காயம்
January 29, 2023, 8:06 pm
தென்கொரியாவில் உள் வளாகங்களில் முகக்கவசம் அணிவது கைவிடப்படுகிறது
January 29, 2023, 7:52 pm
பதிலடி தாக்குதல்கள்: இஸ்ரேல் -பாலஸ்தீனத்தில் அதிகரிக்கும் போர் பதற்றம்
January 29, 2023, 11:35 am