செய்திகள் இந்தியா
குஜராத் கலவரம் குறித்த ஆணவப் படம்: பிபிசி மீது விசாரணை கோரி மனு
லண்டன்:
குஜராத்தில் 2002இல் நடைபெற்ற கலவரம் தொடர்பாக அந்த மாநில முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடி குறித்த ஆவணப் படத்தை பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டது
தொடர்பாக விசாரணை நடத்த வலியுறுத்தி பிரிட்டனின் ஊடக கண்காணிப்பு அமைப்பிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
"இந்தியா: தி மோடி க்வெஸ்டின்' என்ற இரு பாகங்களைக் கொண்ட அந்த ஆவணப் படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் ஒளிபரப்பானது. இதில் குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடிக்கு நேரடி தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரிட்டன் நாட்டின் ஊடக கண்காணிப்பு அமைப்பிடம் அளிக்கப்பட்ட 2,500 பேர் கையொழுத்திட்ட மனுவில், இரு பாகங்களைக் கொண்ட அந்த ஆவணப் படத்தில் நடுநிலைமையுடன் உயர்ந்த தரத்தில் தகவல் வழங்கப்படவில்லை. இது குறித்து பிபிசியிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பிபிசி நிர்வாகக் குழுவும் இந்த ஆவணப் படம் தொடர்பாக தனியாக விசாரணை நடத்த வேண்டும்.
குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்றறச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், விரிவான விசாரணைகளுக்குப் பின்னர் இந்திய உச்சநீதிமன்றம் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துவிட்டது.
இரு தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் அந்த விவகாரத்தை எழுப்ப பிபிசி முயற்சிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 29, 2024, 1:50 pm
குறைந்தது 50 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தாருங்கள்: காங்கிரஸ் தலைவரிடம் முஸ்லிம் அமைப்பு கோரிக்கை
March 28, 2024, 1:36 pm
போட்டியிட வாய்ப்பு மறுப்பு: வருண் காந்திக்கு காங்கிரஸ் அழைப்பு
March 28, 2024, 1:21 pm
கேஜரிவால் கைது: நியாயமான விசாரணைக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
March 25, 2024, 11:51 pm
3 IDIOTS உண்மை நாயகனின் லடாக் உண்ணாவிரதத்துக்கு பெருகும் ஆதரவு
March 25, 2024, 4:08 pm
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
March 24, 2024, 6:55 pm
அரவிந்த் கேஜ்ரிவால் கைதை கண்டித்து மார்ச் 31இல் ‘இண்டியா’ கூட்டணி மாபெரும் பேரணி
March 24, 2024, 5:06 pm
4 ஆவது வகுப்பு படிக்கும் உத்ரா ஜானகியின் முதல் நோன்பு
March 23, 2024, 4:11 pm
திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ராவின் வீட்டில் சிபிஐ சோதனை
March 23, 2024, 10:46 am
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை காவல் விசாரணை
March 22, 2024, 12:42 pm