
செய்திகள் இந்தியா
குஜராத் கலவரம் குறித்த ஆணவப் படம்: பிபிசி மீது விசாரணை கோரி மனு
லண்டன்:
குஜராத்தில் 2002இல் நடைபெற்ற கலவரம் தொடர்பாக அந்த மாநில முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடி குறித்த ஆவணப் படத்தை பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டது
தொடர்பாக விசாரணை நடத்த வலியுறுத்தி பிரிட்டனின் ஊடக கண்காணிப்பு அமைப்பிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
"இந்தியா: தி மோடி க்வெஸ்டின்' என்ற இரு பாகங்களைக் கொண்ட அந்த ஆவணப் படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் ஒளிபரப்பானது. இதில் குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடிக்கு நேரடி தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரிட்டன் நாட்டின் ஊடக கண்காணிப்பு அமைப்பிடம் அளிக்கப்பட்ட 2,500 பேர் கையொழுத்திட்ட மனுவில், இரு பாகங்களைக் கொண்ட அந்த ஆவணப் படத்தில் நடுநிலைமையுடன் உயர்ந்த தரத்தில் தகவல் வழங்கப்படவில்லை. இது குறித்து பிபிசியிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பிபிசி நிர்வாகக் குழுவும் இந்த ஆவணப் படம் தொடர்பாக தனியாக விசாரணை நடத்த வேண்டும்.
குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்றறச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், விரிவான விசாரணைகளுக்குப் பின்னர் இந்திய உச்சநீதிமன்றம் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துவிட்டது.
இரு தசாப்தங்களுக்குப் பிறகு மீண்டும் அந்த விவகாரத்தை எழுப்ப பிபிசி முயற்சிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 1:23 am
போர் நிறுத்தம் அறிவித்தும் மீண்டும் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா பதிலடி
May 10, 2025, 8:42 pm
பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்தை உறுதி செய்தது இந்தியா
May 9, 2025, 4:06 pm
சண்டிகரில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am