செய்திகள் வணிகம்
கூகுள் நிறுவனம் 10% அபராதத் தொகையை 7 நாள்களில் செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு
புது டெல்லி:
இந்திய தொழில் போட்டி ஆணையம் CCI விதித்த ரூ.1,337.76 கோடி அபராதத்துக்கு தடை விதிக்க தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டு திர்ப்பாயம் மறுத்ததை எதிர்த்து கூகுள் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்பு தெரிவித்தது.
தீர்ப்பாயம் உத்தரவின் அடிப்படையில் அபராதத் தொகையில் 10 சதவீதத்தை 7 நாள்களில் செலுத்தவும் உச்சநீதிமன்றறம் உத்தரவிட்டது. இது கூகுள் நிறுவனத்துக்கு பெரும் பின்னடைவாக கருதப்படும்.
பல்வேறு சந்தைகளில் ஆண்ட்ராய்ட் கைப்பேசிகள் தொடர்பான வர்த்தகத்தில் நேர்மையற்றற வழியில் செயல்பட்டதாக கூகுள் நிறுவனத்துக்கு சிசிஐ ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்தது.
அத்துடன் பிளேஸ்டோர் கொள்கைகளிலும் முறைகேடான செயல்களில் ஈடுபட்டதாக அந்த நிறுவனத்துக்கு சிசிஐ ரூ.936.44 கோடி அபராதம் விதித்தது.
உச்சநீதிமன்றத்தில், கூகுளின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள், சிசிஐ அபராத உத்தரவுக்கு எதிராக தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தையே அணுகி தீர்வு பெறுமாறு கூகுள் நிறுவனத்துக்கு உத்தரவிட்டனர்.
தீப்பாயம் உத்தரவிட்டபடி சிசிஐ விதித்த ரூ. 1,337.76 கோடி அபராதத்தில் 10 சதவீதத்தை செலுத்த கூகுள் நிறுவனத்துக்கு 7 நாள்கள் அவகாசம் அளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 2:16 pm
ரூப்பியாவின் சரிவால் மலேசியாவில் பணிபுரியும் இந்தோனேசியர்களுக்குப் ‘பண மழை’
May 26, 2026, 5:34 pm
5 பேர் அமரக்கூடிய காரை அறிமுகம் செய்கிறது Ferrari
May 26, 2026, 9:56 am
அமெரிக்கா-ஈரான் அமைதிப் பேச்சால் ரிங்கிட் உயர்வு: சரிவைச் சந்தித்த இந்திய ரூபாய்
May 20, 2026, 11:40 am
நச்சுணவால் நெஸ்ட்லெ, டெனன் பால்மாவு மீட்பு: நிறுவனங்கள்மீது விசாரணை
May 19, 2026, 8:48 pm
Starbucks Korea வெளியிட்ட புதிய குவளை: பறிபோனது CEOவின் பதவி
May 15, 2026, 12:22 pm
BSN வங்கி குலுக்கலில் 10 லட்சம் ரிங்கிட்டை ஆசிரியர் முனீஸ்வரன் மணியம் வென்றார்
May 14, 2026, 4:26 pm
