செய்திகள் வணிகம்
10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது மைக்ரோசாஃப்ட்
நியூயார்க்:
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 10,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என்று அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.
ஊழியர்களுக்கு அவர் அனுப்பிய இமெயிலில், கொரோனாவின்போது டிஜிட்டல் செலவினங்களை அதிகரித்த வாடிக்கையாளர்கள், தற்போது அதனை குறைத்து வருகின்றனர்.
அத்துடன் உலகின் சில பகுதிகள் பொருளாதார மந்தநிலையை எதிர்கொண்டுள்ளன. செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றறத்துடன் கணினி பயன்பாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சி உருவாகிறறது.
மைக்ரோசாஃப்ட் வருவாயுடன், அதன் செலவின கட்டமைப்பு சீரமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், 2023-24 நிதியாண்டின் மூன்றவது காலாண்டுக்குள் 10,000 மைக்ரோசாஃப்ட் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர். இது மைக்ரோசாஃப்ட் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் 5 சதவீதத்துக்கும் குறைவாகும்.
பணிநீக்கம் செய்யப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். அவர்களுக்கு 6 மாதங்களுக்கு மருத்துவ காப்பீடு தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am
காலுறை சர்ச்சை தொடர்பான நிறுவனத்தின் வணிக உரிமம் ரத்து
March 11, 2024, 11:35 am
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பில் மாற்றம் இல்லை
March 8, 2024, 11:06 am
மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்தது
March 7, 2024, 5:41 pm
இஸ்ரேல் போரின் விளைவால் மத்திய கிழக்கு நாடுகளில் வர்த்தகம் இழந்து தவிக்கும் Starbucks
March 6, 2024, 12:05 pm
கோலாலம்பூருக்கு மீண்டும் பறக்கிறது பிரிட்டிஷ் ஏர்வேஸ்
March 5, 2024, 5:50 pm
உலகப் பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தை இழந்தார் எலான் மஸ்க்
March 5, 2024, 5:17 pm
பங்களாதேஷ், ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளுக்கு இந்தியா 64,400 டன் வெங்காயம் ஏற்றுமதி
March 4, 2024, 11:29 am