செய்திகள் மலேசியா
தேசிய முன்னணி முடிவால் வாக்காளர்கள் குழப்பமடைந்துள்ளனர்
கூலிம்:
தேசிய முன்னணி முடிவால் வாக்காளர்கள் குழப்பமடைந்துள்ளனர் என்று பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதியின் தேசிய முன்னணி வேட்பாளர் சிவராஜ் கூறினார்.
நம்பிக்கை கூட்டணியும் தேசிய முன்னணியும் இணைந்து மத்தியில் ஆட்சியமைத்துள்ளது.
இதனால் தியோமான் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதில் இருந்து நம்பிக்கை கூட்டணி பின்வாங்கி கொண்டது.
இதே போன்று பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளருக்கு தேசிய முன்னணி வழிவிட்டுள்ளது.
தேசிய முன்னணி முடிவால் பாடாங் செராய் தொகுதி வாக்காளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
அத் தொகுதி வாக்காளர்கள் பலர் இன்னமும் தேசிய முன்னணிக்குத்தான் வாக்களிக்கவுள்ளதாக கூறுகின்றனர்.
ஆகையால், வெள்ளிக்கிழமை நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்கள் வாக்களிக்க வேண்டும்.
வாக்குச் சீட்டில் என் பெயர் இருந்தாலும் எனக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சிவராஜ் கேட்டுக் கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
March 15, 2026, 10:56 am
டிரெய்லர், மூன்று வாகனங்கள் உட்படுத்திய விபத்தில் 12 பேர் பாதிப்பு; 9 கி.மீ வரை போக்குவரத்து நெரிசல்
March 14, 2026, 8:09 pm
ஜம்ரி வினோத்திற்கு எதிராக வீறுகொண்டு எழுந்த இந்திய பெண்களுக்கு பாராட்டுகள்: டத்தோஸ்ரீ சரவணன்
March 14, 2026, 6:15 pm
ஜம்ரி வினோத், தமீம் டஹாரி நாடு திரும்ப வேண்டும்: டத்தோஶ்ரீ ரமணன்
March 14, 2026, 5:23 pm
ஏப்ரல் 1 முதல் வியாபாரிகள் தள வாடகை 50% குறைப்பு: DBKL அறிவிப்பு
March 14, 2026, 5:19 pm
பாராங் கத்தியால் வெட்டப்பட்டு ஆண் உயிரிழந்தார்
March 14, 2026, 2:36 pm
