நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்வார் தலைமையிலான அமைச்சரவையின் முதல் கூட்டம்

புத்ரா ஜெயா:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று புத்ராஜெயாவில் உள்ள பெர்டானா புத்ராவில் ஒற்றுமை அரசாங்க அமைச்சரவையின் முதல் சிறப்புக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

கடந்த வெள்ளிக் கிழமையன்றது பிரதமர் அன்வார் 28 அமைச்சர்கள்,  இரண்டு துணைப் பிரதமர்களைக் கொண்ட அமைச்சரவையின் பெயர் பட்டியலை அறிவித்தார். மேலும் பிரதமரே நிதி அமைச்சர் என்றும் அவர் தெரிவித்தார்.

அனைத்து அமைச்சரவையும் பங்கேற்ற முதல் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

அன்வார் சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதற்கு முன்பு காலை 8.10 மணியளவில் பெர்டானா புத்ரா கட்டிடத்திற்கு வந்தார்.

அன்வார் நவம்பர் 24 அன்று பேரரசர் முன்னிலையில் பிரதமராக பதவியேற்றார் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset