நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துணைப் பிரதமராகப் பணியைத் தொடங்கினார் ஸாஹித் ஹமிதி

புத்ரா ஜெயா:

அஹ்மத் ஸாஹித் ஹமிடி துணைப் பிரதமராக இன்று புத்ரா ஜெயாவில் உள்ள பெர்டானா புத்ராவில் தன்னுடைய முதல் நாள் பணியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினார். அவரை நாட்டின் தலைமை செயலாளர், முஹம்மத் ஜூகி அலி வரவேற்றார்.

பிரதமர் துறையின் இஸ்லாமிய விவகார உதவி அதிகாரி கம்ருஜாமான் அப்துல் அஜீஸ் தலைமையில் நடைபெற்ற பிராத்தனைக்குப் பின்னர் நான்காவது மாடியில் அமைந்திருக்கும் தன்னுடைய அலுவலகத்தில் நேர பதிவு அட்டையை அவர் ஸ்கேன் செய்தார்.

பாகன் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ அஹ்மத் ஸாஹித் ஹமிடி தனது அலுவலகத்திற்குள் இருந்தவருகை பதிவுப் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று ஸாஹித் ஹமிடி துணைப் பிரதமராகவும் புறநகர் வட்டார மேம்பாட்டு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset