நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வாக்காளர்களுக்கு வெகுமதியா? சன்னுசியிடம் விசாரணை நடத்துங்கள்

கோலாலம்பூர்:

வாக்காளர்களுக்கு வெகுமதி என்ற விவகாரம் அடிப்படையில் கெடா மந்திரி புசார் முஹம்மத் சன்னுசியிடம் விசாரணைகள் நடத்த வேண்டும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் வலியுறுத்தி உள்ளார்.

பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் சனுசி உரையாற்றினார்.

அப்போது 15ஆவது பொதுத் தேர்தலில் வாக்காளர்களுக்கு வெகுமதி வழங்கப்பட்டது போல் அவர் பேசினார்.

குறிப்பாக வாக்காளர்களுக்கு 50 அல்லது 100 வெள்ளி வெகுமதி வழங்குவது உட்பட பல விவகாரங்கள் தொட்டு அவர் பேசியுள்ளார்.

பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் இந்தக் கலாச்சாரம் கடைப்பிடிப்பது போன்று அவரின் உரை உள்ளது.

இது அவதூறான பிரச்சாரம் ஆகும். இதன் அடிப்படையில் சனுசியிடம் போலீஸ்படையும் தேர்தல் ஆணையமும் உடனடியாக விசாரணைகளை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset