செய்திகள் இந்தியா
எல்லையில் சீனா குவிக்கும் படைகள்; மௌனம் காக்கும் மோடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடெல்லி:
எல்லையில் சீனா படைகளையும் ஆயுதங்களையும் குவித்து வருகிறது என்றும் பிரதமர் மோடி தொடர்ந்து அதனை மறுத்து, திசை திருப்பி வருகிறார் என்றும் காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டு குழு கூட்டம் அதன் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று நடந்தது. இதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் இடைக்கால தலைவரான சோனியா காந்தி, எம்.பி. வேணுகோபால் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் பலர்கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், எல்லை கோட்டு பகுதியில் தொடர்ந்து சீனா படைகள் மற்றும் ஆயுதங்களை குவித்து வருகிறது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருந்தபோதும், சீனாவின் தொடர் ஊடுருவலை பற்றி கவனத்தில் கொள்ளாமல், மத்திய அரசு தொடர்ந்து அமைதி காத்து வருகிறது என குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளது.

இந்த சவால்களை இந்தியா எதிர்கொண்டுள்ளபோது, பிரதமர் தொடர்ந்து அதனை மறுத்து, திசை திருப்பியும் மதவாதத்தை கிளப்பும் வேலையில் ஈடுபடுகிறார் என்றும் தெரிவித்து உள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த 2020-ம் ஆண்டு ஜூனில் சீனா மற்றும் இந்தியாவின் படை வீரர்கள் மோதி கொண்டதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். சில சீன வீரர்களும் உயிரிழந்தனர்.
இதன்பின்பு, எல்லை பகுதியில் இருந்து சீனா மற்றும் இந்தியாவின் படைகள் வாபஸ் பெறப்பட்டன. அதற்காக தளபதிகள் மட்டத்தில் பல சுற்று பேச்சுவார்த்தைகளை இரு நாடுகளும் மேற்கொண்டன. எனினும், சீனா எல்லை பகுதியில் தொடர்ந்து வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்து வருகிறது. ஆனால் அதுகுறித்து பிரதமர் மோடியோ பாதுகாப்பு அமைச்சரோ பதில் ஏதும் சொல்வதில்லை என்று கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
December 31, 2025, 12:08 pm
முன்னாள் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு ஒன்றிய அரசு இதுவரை வீடு ஒதுக்காமல் இழுத்தடிப்பு
December 29, 2025, 1:18 pm
விமானிகளுக்கு போதிய ஓய்வளிக்க 130 விமான சேவைகளை குறைக்க முன்வந்தது இண்டிகோ நிறுவனம்
December 27, 2025, 8:20 am
திருப்பதி கோவில் காணிக்கையில் ரூ.100 கோடி மோசடி செய்தவர்: விரைவில் தீர்ப்பு
December 26, 2025, 4:13 pm
பான் அட்டை வைத்திருப்பவர்கள், ஆதார் அட்டையுடன் இணைக்க டிச. 31ஆம் தேதியே கடைசி நாள்: இந்திய அரசு அறிவிப்பு
December 26, 2025, 12:19 pm
இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது
December 24, 2025, 8:54 pm
இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் இரு புதிய விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி
December 22, 2025, 12:29 pm
ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கி ஊா்வலம் நாளை செவ்வாய்க்கிழமை புறப்படுகிறது
December 21, 2025, 11:30 am
