நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாஸ்போர்டில் ஒற்றை பெயர் மட்டும் இருந்தால் துபாயில் அனுமதி இல்லை

புது டெல்லி: 

பாஸ்போர்டில் ஒற்றை பெயரை மட்டும் கொண்ட நபர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாடு விதித்துள்ள புதிய விதிமுறைகள் 21-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக கூறி, ஏர் இந்தியா நிறுவனம்  வெளியிட்டுள்ள அறிவிக்கையில், பாஸ்போர்டில்  வெறும் ஒற்றை பெயர் (ஸர்நேம்) இருப்பவர்கள் அனுமதிக்கப் படமாட்டார்கள். அவர்களுக்கு புதிதாக விசா வழங்கப் படமாட்டாது.

முன்கூட்டியே விசாவில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ள முடியாத நாடு கடத்தப்பட்ட நபர்களாக கருதப்படுவார்கள் என்று ஐக்கிய அரபு அமீரகம்  உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, ஒற்றை பெயர் கொண்ட பயணிகள் சுற்றுலா அல்லது எந்த வகையிலான விசாவிலும் செல்ல அனுமதிக்கப் படமாட்டார்கள்.

அதேநேரத்தில், அங்கு குடியுரிமை பெற்றவர்கள், பணிக்கான விசாக்களில் உள்ளவர்களுக்கு இந்த புதிய விதிமுறை பொருந்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset