நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரான் ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வியில் முடிந்தது

இஸ்தான்புல்:

ஈராக், சிரியா வழியாக துர்க்கி நாட்டின் வான்வெளிக்குள் நுழைய முயன்ற ஏவுகணை ஒன்று NATO வின் வான்வழிப் பாதுகாப்பு அமைப்பால் அழிக்கப்பட்டது.

துர்க்கி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் அந்தப் பாலிஸ்டிக் ஏவுகணை கிழக்கு மெடிட்டரேனியக் கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ள NATO-வின் வான்வழி, ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளால் சரியான நேரத்தில் தடுக்கப்பட்டதாகத் தெரிவித்தது.

எனினும், அந்த ஏவுகணையின் இலக்கு குறித்தோ அல்லது ஏற்பட்ட சேதம் குறித்தோ துர்க்கி அதிகாரிகள் மேலதிக விவரங்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset