செய்திகள் வணிகம்
மும்பையில் இருந்து நியூயார்க், பாரிஸ், ப்ராங்பர்ட் நகரங்களுக்கு ஏர்இந்தியா சேவை
மும்பை:
ஏர் இந்தியா நிறுவனம் விரைவில் மும்பையில் இருந்து நியூயார்க், பாரிஸ், ப்ராங்பூட் நகரங்களுக்கு புதிய விமான சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்தது.
தில்லியில் இருந்து கோபன்ஹேகன், மிலன் மற்றும் வியன்னாவுக்கு விமான சேவையை மீண்டும் தொடங்குவதாகவும், புதிதாக விமானங்களை குத்தகைக்கு வாங்கி அதன் மூலம் இந்த சேவை அளிக்கப்படும் என அந்நிறுவனம் கூறியது.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வாரத்துக்கு 47 விமானங்கள் ஏர் இந்தியா நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.
தில்லி-மிலன் வழிதடத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் வாரம் 4 விமானங்களும் ,தில்லி-வியின்னா மற்றும் தில்லி- கோபன்ஹேகன் இடையே அடுத்த ஆண்டு பிப்ரவரி 18 மற்றும் மார்ச் 1ஆம் தேதி முதல் வாரம் 4 விமானங்கள் இயக்கப்படும்.
அடுத்த காலாண்டில் மும்பையிலிருந்து பாரிஸுக்கு வாரம் 3 முறையும், மற்றும் ப்ராங்பட் நகருக்கு வாரம் 4 முறையும் புது விமானங்கள் இயக்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
January 5, 2026, 11:20 am
வெனிசுவேலாவில் அரசியல் மாற்றம்: உலக எண்ணெய் விலை சரிவு
January 2, 2026, 3:46 pm
சிங்கப்பூரில் விற்பனைக்கு வரும் 4,600 புதிய BTO வீடுகள்
December 31, 2025, 12:43 pm
இன்று தலைநகரில் தங்கம் விலை குறைந்தது
December 25, 2025, 11:20 am
சாந்தா ஆன் தெ கோ பிரச்சாரத்துடன் ஜிவி ரைட் கிறிஸ்துமஸ் விழாவை மகிழ்ச்சியாக கொண்டுகிறது
December 22, 2025, 5:01 pm
ஜிவி ரைட் நிறுவனத்தின் 5 ரிங்கிட் சலுகை; இன்று முதல் கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் அமல்: கபீர் சிங்
December 13, 2025, 10:50 am
இந்தியா முழுவதும் ஒரு கோடி பேல் பருத்தி தரம் குறைவு: புதிய நெருக்கடியால் இந்திய ஜவுளித் தொழிலில் பாதிப்பு
December 9, 2025, 9:26 am
Perplexity என்ற AI நிறுவனத்தில் முதலீட்டாளராக ரொனால்டோ இணைந்துள்ளார்
December 8, 2025, 2:40 pm
ஈப்போவில் aA கிலாசிக் ஹோம் 3 வது கிளை நிறுவனத்தை நடிகை ஸ்ரீ திவ்வியா அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்
December 6, 2025, 6:44 pm
