செய்திகள் மலேசியா
நாட்டின் 10ஆவது பிரதமராக அன்வார் பதவியேற்றார்
கோலாலம்பூர்:
மலேசியாவின் 10ஆவது பிரதமராக பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மாலை சரியாக 5.00 மணிக்கு பதவியேற்றார்.
இஸ்தானா நெகாராவில் பேரரசர், அல்-சுல்தான் அப்துல்லாஹ் ரியாதுதீன் அல்-முஸ்தஃபா பில்லா ஷா அன்வார் இப்ராஹிமுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இன்று காலை மலாய் ஆட்சியாளர்களுடனான ஆலோசனையைத் தொடர்ந்து அன்வாரை பிரதமராக நியமிக்க பேரரசர் முடிவு செய்தார்.
முதலில் PHகூட்டணியும் Perikatan Nasionalம் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்குமாறு பேரரசர் கேட்டுக் கொண்டார்.
ஆனால், பக்காத்தான் ஹரப்பானுடம் இணைந்து செயல்பட முடியாது என்று தேசியக் கூட்டணித் தலைவரான முஹைதீன் யாசின் அந்த யோசனையை நிராகரித்தார்.
கபுங்கன் பார்ட்டி சரவாக் , கபுங்கன் ரக்யாட் சபா ஆகியோர் முஹைதீனை பிரதமராக ஆதரிப்பதாக கூறிய போதிலும், அந்த இரு கட்சிகளும் இறுதியில் பேரரசரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கான விருப்பத்தைப் பின்பற்றுவதாகக் கூறின.
அன்வார் இப்ராஹிம் பதவியேற்ற பின் கோலாலம்பூர் முஃப்தி பேரரசர் அவையில் பிரார்த்தனை - துவா - செய்தார்.
பதவியேற்பு நிகழ்வில் அன்வாரின் துணைவி டத்தின்ஸ்ரீ டாக்டர் வான் அஜீஸா வான் இஸ்மாயில் உடன் இருந்தார். கூட்டணிக் கட்சித் தலைவர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 12:26 am
66 மணி நேர இடை விடாத அப்சலூட், காயா ராயா பெருநாள் சந்தை பிரதமரின் வருகையால் மேலும் கோலாகலமடைந்தது
March 13, 2026, 11:53 pm
அசாம் பாக்கி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்: ரபிசி
March 13, 2026, 11:52 pm
ரவாங்கில் ஆலய இடிப்புப் பணிகளை நிறுத்த செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு
March 13, 2026, 11:52 pm
வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை அனைத்து இடங்களிலும் செயல்படுத்த முடியாது: சைட் ஹுசைன்
March 13, 2026, 6:54 pm
மலாயாவின் முதல் பெண் தலைமை நீதிபதி சித்தி நோர்மா யாகோப் காலமானார்
March 13, 2026, 6:33 pm
சிலிம்ரீவர் ஸ்ரீ மகா லெட்சுமி ஆலயத்தின் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது: டத்தோ சிவக்குமார்
March 13, 2026, 5:35 pm
ஈகைப் பெருநாளை முன்னிட்டு கிளாந்தானுக்கு செல்லும் பயணச் சீட்டுகள் விற்றுத் தீர்ந்தன
March 13, 2026, 5:34 pm
