செய்திகள் மலேசியா
நாட்டின் 10ஆவது பிரதமராக அன்வார் பதவியேற்றார்
கோலாலம்பூர்:
மலேசியாவின் 10ஆவது பிரதமராக பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மாலை சரியாக 5.00 மணிக்கு பதவியேற்றார்.
இஸ்தானா நெகாராவில் பேரரசர், அல்-சுல்தான் அப்துல்லாஹ் ரியாதுதீன் அல்-முஸ்தஃபா பில்லா ஷா அன்வார் இப்ராஹிமுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இன்று காலை மலாய் ஆட்சியாளர்களுடனான ஆலோசனையைத் தொடர்ந்து அன்வாரை பிரதமராக நியமிக்க பேரரசர் முடிவு செய்தார்.
முதலில் PHகூட்டணியும் Perikatan Nasionalம் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்குமாறு பேரரசர் கேட்டுக் கொண்டார்.
ஆனால், பக்காத்தான் ஹரப்பானுடம் இணைந்து செயல்பட முடியாது என்று தேசியக் கூட்டணித் தலைவரான முஹைதீன் யாசின் அந்த யோசனையை நிராகரித்தார்.
கபுங்கன் பார்ட்டி சரவாக் , கபுங்கன் ரக்யாட் சபா ஆகியோர் முஹைதீனை பிரதமராக ஆதரிப்பதாக கூறிய போதிலும், அந்த இரு கட்சிகளும் இறுதியில் பேரரசரின் ஒற்றுமை அரசாங்கத்திற்கான விருப்பத்தைப் பின்பற்றுவதாகக் கூறின.
அன்வார் இப்ராஹிம் பதவியேற்ற பின் கோலாலம்பூர் முஃப்தி பேரரசர் அவையில் பிரார்த்தனை - துவா - செய்தார்.
பதவியேற்பு நிகழ்வில் அன்வாரின் துணைவி டத்தின்ஸ்ரீ டாக்டர் வான் அஜீஸா வான் இஸ்மாயில் உடன் இருந்தார். கூட்டணிக் கட்சித் தலைவர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
December 13, 2025, 10:44 pm
மலாக்கா துப்பாக்கி சூடு சம்பவம்; இன ஒடுக்குமுறையில் சகிப்புத்தன்மை இல்லை: பிரதமர்
December 13, 2025, 8:17 pm
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் சாதனை இளைஞர்களை உருவாக்கும் மைஸ்கில் அறவாரியத்திற்கு பாராட்டுகள்: குலசேகரன்
December 13, 2025, 8:16 pm
மைஸ்கில் அறவாரியத்தின் 7ஆவது பட்டமளிப்பு விழா; 250 மாணவர்கள் பட்டம் பெற்றனர்: பசுபதி
December 13, 2025, 3:37 pm
இணைய பாதுகாப்பு சட்டம் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தைக் கட்டுப்படுத்தும்: டாக்டர் சிவமுருகன்
December 13, 2025, 11:36 am
21 ஆண்டுக்கால போராட்டத்திற்கு பின் செமினி தோட்ட மக்களுக்கு சொந்த வீடுகள் கிடைத்தது: அருட்செல்வன்
December 12, 2025, 11:05 pm
பத்துகாஜா சேவை மையத்தினர் திருத்த மையத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்: வ.சிவகுமார்
December 12, 2025, 10:08 pm
