
செய்திகள் இந்தியா
இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய நடைமுறை
புது டெல்லி:
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமானப் பயணிகள் ஏர் சுவிதா படிவத்தை பூர்த்தி செய்வதை ரத்து செய்து புதிய நடைமுறையை இந்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமானப் பயணிகள் ஏர் சுவிதா படிவத்தை பூர்த்தி செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த நடைமுறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. பயணிகள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொள்ள வேண்டும்.
விமான நிலையத்தில் பரிசோதனையின்போது கொரோனா அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டால் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
இந்தியா வந்த பின், தங்கள் உடல்நிலையை பயணிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
ஒருவேளை கரோனா அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர்கள் செல்ல வேண்டும் அல்லது தேசிய உதவி எண் (1075), மாநில உதவி எண்ணை தொடர்புகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
September 23, 2023, 11:31 pm
பாஜக கூட்டணியில் தேவகவுடா கட்சி இணைந்தது
September 23, 2023, 8:56 pm
4 ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் தலைவர் விடுதலை
September 23, 2023, 10:05 am
நிலவில் இன்று முதல் மீண்டும் சூரிய ஒளிபட்டபோதிலும், விக்ரம் லேண்டர் செயல்பட தொடங்கவில்லை - இஸ்ரோ
September 22, 2023, 5:17 pm
இந்திய மருத்துவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம்
September 22, 2023, 3:10 pm
கனடாவினருக்கான விசாவை நிறுத்தியது இந்தியா
September 22, 2023, 3:01 pm
சிறையில் சந்திரபாபு நாயுடுவை கொல்ல சதி: மகன் புகார்
September 22, 2023, 11:47 am
நாடாளுமன்ற தேர்தல் பணி; மக்கள் நீதி மய்யம் ஆலோசனை நடத்துகிறது
September 22, 2023, 10:30 am
நிலவில் உறக்க நிலையிலுள்ள லேண்டர், ரோவர் மீண்டும் இயங்குமா?: முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள்
September 21, 2023, 4:51 pm
லேண்டர், ரோவரை விழிக்க செய்யும் பணிகளை இஸ்ரோ தொடங்கியது
September 21, 2023, 9:39 am