செய்திகள் இந்தியா
காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.வில் எழுப்பிய பாகிஸ்தான்: இந்தியா கண்டனம்
நியூயார்க்:
ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியது.இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பொதுச் சபை முழு அமர்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் மீண்டும் எழுப்பியது.
அதற்கு பதிலளித்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் பிரதிக் மாத்தூர் பேசியதாவது:
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் தொடர்பான மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தை ஆலோசிப்பதற்காக ஐ.நா. பொதுச் சபை கூட்டப்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தான் பிரதிநிதி ஜம்மு -காஷ்மீர் குறித்த தேவையற்ற குறிப்புகளை மீண்டும் இங்கு எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதிநிதி எதை நம்பினாலும், ஜம்மு-காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக உள்ளது என்பதை அவருக்கு மீண்டும் தெரிவிப்பதாக இந்தியா கண்டனம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
January 4, 2026, 4:26 pm
திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து
January 2, 2026, 3:20 pm
புத்தாண்டு தினத்தில் சபரிமலையில் திரண்ட பக்தா்கள்
December 31, 2025, 12:08 pm
முன்னாள் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு ஒன்றிய அரசு இதுவரை வீடு ஒதுக்காமல் இழுத்தடிப்பு
December 29, 2025, 1:18 pm
விமானிகளுக்கு போதிய ஓய்வளிக்க 130 விமான சேவைகளை குறைக்க முன்வந்தது இண்டிகோ நிறுவனம்
December 27, 2025, 8:20 am
திருப்பதி கோவில் காணிக்கையில் ரூ.100 கோடி மோசடி செய்தவர்: விரைவில் தீர்ப்பு
December 26, 2025, 4:13 pm
பான் அட்டை வைத்திருப்பவர்கள், ஆதார் அட்டையுடன் இணைக்க டிச. 31ஆம் தேதியே கடைசி நாள்: இந்திய அரசு அறிவிப்பு
December 26, 2025, 12:19 pm
இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது
December 24, 2025, 8:54 pm
