
செய்திகள் இந்தியா
காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா.வில் எழுப்பிய பாகிஸ்தான்: இந்தியா கண்டனம்
நியூயார்க்:
ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியது.இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பொதுச் சபை முழு அமர்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் மீண்டும் எழுப்பியது.
அதற்கு பதிலளித்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் பிரதிக் மாத்தூர் பேசியதாவது:
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் தொடர்பான மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த விவகாரத்தை ஆலோசிப்பதற்காக ஐ.நா. பொதுச் சபை கூட்டப்பட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தான் பிரதிநிதி ஜம்மு -காஷ்மீர் குறித்த தேவையற்ற குறிப்புகளை மீண்டும் இங்கு எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதிநிதி எதை நம்பினாலும், ஜம்மு-காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக உள்ளது என்பதை அவருக்கு மீண்டும் தெரிவிப்பதாக இந்தியா கண்டனம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 4:06 pm
மியான்மரில் டிரோன் தாக்குதல் நடத்தவில்லை: இந்திய ராணுவம்
July 14, 2025, 7:09 am
ஆள் உயர ராஜ நாகம்: அசராமல் கையில் பிடித்திருந்த ஆடவர்
July 13, 2025, 9:20 pm
டெல்லியில் நடைபாதையில் உறங்கிய ஐவர் மீது பாய்ந்த Audi கார்
July 12, 2025, 4:08 pm
முகத்தில் குத்துவிட்ட எம்எல்ஏ மீது முதல்வர் கூறியபின் போலிசார் வழக்குப் பதிவு
July 12, 2025, 2:10 pm
75 வயதை எட்டியவுடன் மோடி பதவி விலக ஆர்எஸ்எஸ் சூசக அறிவிப்பு
July 11, 2025, 10:02 pm
மாதவிடாய் என்று கூறி ஆடைகளை களைந்து சோதனை: பள்ளி முதல்வர், 4 பேர் கைது
July 11, 2025, 9:51 pm
5 நாடுகளின் பயணத்தை முடித்த மோடி எப்போது மணிப்பூர் செல்வார்: காங்கிரஸ் கேள்வி
July 10, 2025, 8:54 pm