செய்திகள் கலைகள்
மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட ஷாருக்கான்
மும்பை:
துபையில் இருந்து தனி விமானம் மூலம் மும்பை வந்த பாலிவுட் நடிகர் ஷாருக்கானை சுங்க வரித் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்..
இதுகுறித்து விமானத் துறை அதிகாரிகள் கூறுகையில்,
துபையில் இருந்து சனிக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு ஷாருக்கான் அவரது பாதுகாவலர்கள் மும்பை விமான நிலையம் வந்தடைந்தனர்.
அவர்களின் பைகளை சோதனையிட்டபோது ரூ.17.86 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் இருந்தன. இதற்கு ரூ.6.88 லட்சம் சுங்க வரி கட்ட வேண்டும் என்பதாலும், இதற்கான கட்டணம் செலுத்தும் மையம் அதிகாலையில்தான் திறக்கப்படும் என்பதாலும் ஷாருக்கான், அவரது பாதுகாவலர்கள் மும்பை விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டனர்.
ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ஷாருக்கான் மட்டும் செல்வதற்கு சுங்க வரித் துறை அதிகாரிகள் அனுமதித்தனர்.
அதிகாலையில் சுங்க வரி கட்டணம் செலுத்தும் மையம் திறக்கப்பட்டவுடன், ஷாருக்கானின் பாதுகாவலர் ரூ.6.88 லட்சத்தைக் கட்டிவிட்டு வெளியே சென்றார்' என்றனர்.
தொடர்புடைய செய்திகள்
October 27, 2025, 12:58 pm
பலூசிஸ்தானை ஆதரித்து பேசினாரா சல்மான் கான்?: தீவிரவாதிகள் பட்டியலில் சல்மானை சேர்த்த பாகிஸ்தான்
October 24, 2025, 12:03 pm
"தம்பி, தவறான தகவலைப் பரப்புவது தீங்கையே தரும்": விஜய் குறித்து பரவிய செய்திக்கு நடிகர் சூரி விளக்கம்
October 23, 2025, 4:33 pm
நடிகை மனோரமாவின் மகனும் நடிகருமான பூபதி காலமானார்
October 23, 2025, 3:32 pm
இசையமைப்பாளரும் தேவாவின் சகோதரருமான சபேஷ் காலமானார்
October 20, 2025, 9:18 pm
துல்கர் சல்மானின் ‘காந்தா’ நவம்பர் 14இல் வெளியாகிறது
October 17, 2025, 8:11 pm
இந்தியா-ஆசியான் திரைப்பட விழா 2025 சென்னையில் தொடங்கியது
October 17, 2025, 12:02 pm
பீட் தலைவன் மாபெரும் டிஜே போட்டியில் டிஜே நேஷ் வெற்றி பெற்றார்: குணராஜ்
October 12, 2025, 10:55 am
