செய்திகள் இந்தியா
எஸ்பிஐ வங்கியில் ரூ. 11 கோடி நாணயங்கள் திருட்டு: 25 இடங்களில் சிபிஐ சோதனை
புது டெல்லி:
ராஜஸ்தானில் உள்ள எஸ்பிஐ வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து ரூ.11 கோடி மதிப்புள்ள நாணயங்கள் திருடப்பட்ட வழக்கில், வங்கி முன்னாள் அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தில்லி, ராஜஸ்தானில் மொத்தம் 25 இடங்களில் இச்சோதனை நடைபெற்றது.
கரௌலி மாவட்டம், மெஹந்திபூரில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையில் நாணயங்கள் இருப்பு தொடர்பான முதல்கட்ட ஆய்வில் குளறுபடிகள் இருப்பது கடந்த 2021, ஆகஸ்டில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, நாணயங்களை முழுமையாக எண்ணுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, ஜெய்ப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் பணியமர்த்தப்பட்டது.
வங்கியின் கணக்குப் புத்தகங்களின்படி ரூ.13 கோடி நாணயங்கள் இருக்க வேண்டிய நிலையில், வெறும் ரூ.2 கோடி நாணயங்கள் மட்டுமே இருந்ததை தனியார் நிறுவனம் கண்டறிந்தது.
இதுதொடர்பாக வங்கி முன்னாள் அதிகாரிகள் 15 பேர் மற்றும் இதர நபர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
March 25, 2026, 6:20 pm
"எனது வாகனத்தில் இஸ்லாமியர்களுக்கு அனுமதியில்லை": ரேபிடோ ஓட்டுநர் பணிநீக்கம்
March 25, 2026, 10:01 am
மாட்டை பலி கொடுக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு: இளைஞருக்கு கொலை மிரட்டல்
March 24, 2026, 5:16 pm
காசநோய் குழந்தைகளுக்கு 47,000 ரூபாய் திரட்டிய பணியாளர்கள்
March 24, 2026, 4:22 pm
"எக்ஸ்ட்ரா காசு தர்றோம்.. பார்சல் பண்ணுங்க": முதியவரை மூட்டையில் கட்டி கொண்டு வந்த 5 பேர்
March 24, 2026, 4:16 pm
ஈகைத் திருநாள் தொழுகைக்குத் தடை விதித்த அதிகாரி: இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நின்ற இந்து மக்கள்
March 24, 2026, 2:43 pm
வெற்று மிரட்டலா அல்லது சதியா?: டெல்லி பள்ளிகள், சட்டசபைக்குத் தொடரும் மர்ம மின்னஞ்சல்கள்
March 23, 2026, 5:16 pm
ஆட்டோ ஓட்டி வாழ்வாதாரத்தை வெல்லும் வீர மங்கையர்கள்
March 20, 2026, 8:29 pm
