செய்திகள் இந்தியா
எஸ்பிஐ வங்கியில் ரூ. 11 கோடி நாணயங்கள் திருட்டு: 25 இடங்களில் சிபிஐ சோதனை
புது டெல்லி:
ராஜஸ்தானில் உள்ள எஸ்பிஐ வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து ரூ.11 கோடி மதிப்புள்ள நாணயங்கள் திருடப்பட்ட வழக்கில், வங்கி முன்னாள் அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தில்லி, ராஜஸ்தானில் மொத்தம் 25 இடங்களில் இச்சோதனை நடைபெற்றது.
கரௌலி மாவட்டம், மெஹந்திபூரில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையில் நாணயங்கள் இருப்பு தொடர்பான முதல்கட்ட ஆய்வில் குளறுபடிகள் இருப்பது கடந்த 2021, ஆகஸ்டில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, நாணயங்களை முழுமையாக எண்ணுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, ஜெய்ப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் பணியமர்த்தப்பட்டது.
வங்கியின் கணக்குப் புத்தகங்களின்படி ரூ.13 கோடி நாணயங்கள் இருக்க வேண்டிய நிலையில், வெறும் ரூ.2 கோடி நாணயங்கள் மட்டுமே இருந்ததை தனியார் நிறுவனம் கண்டறிந்தது.
இதுதொடர்பாக வங்கி முன்னாள் அதிகாரிகள் 15 பேர் மற்றும் இதர நபர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
April 23, 2024, 4:43 pm
பெரும் போராட்டத்திற்கு பிறகு இறுதியில் கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது: ஆம் ஆத்மி
April 23, 2024, 4:38 pm
மேற்கு வங்கத்தில் 25,753 அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனம் ரத்து
April 23, 2024, 8:35 am
முஸ்லிம்கள் குறித்து மோடியின் இனத்துவேஷ பேச்சு: காங்கிரஸ் கட்சி தோ்தல் ஆணையத்தில் புகாா்
April 22, 2024, 9:23 am
இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும்: ப.சிதம்பரம்
April 21, 2024, 2:41 pm
வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொய் செய்தி: யூடியூப் சேனல் மீது வழக்கு
April 21, 2024, 2:18 pm
வாக்களித்தால் குடிநீர்: கர்நாடக துணை முதல்வர் மீது வழக்கு
April 20, 2024, 8:44 pm
இஸ்ரேல், துபாய், தெஹ்ரான் விமான சேவையை ரத்து செய்தது ஏர் இந்தியா
April 19, 2024, 1:28 pm
பாஜக தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினர் என குறிப்பிடப்பட்டவில்லை: அசாதுதீன் ஓவைசி
April 19, 2024, 1:04 pm
சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேல் கப்பலில் இருந்து கேரளம் திரும்பிய பெண் மாலுமி
April 19, 2024, 11:10 am