
செய்திகள் இந்தியா
3.4 கி.மீ, நீளமான சரக்கு ரயில் : இந்தியா சோதனை
புது டெல்லி:
மிக நீளமான மற்றும் அதிக சரக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லக் கூடிய சூப்பர் வாசுகி சரக்கு ரயில் (3.5 கிமீ நீளம்)வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலம், கோர்பாவில் இருந்து மகாராஷ்டிரத்தின் நாகபுரிக்கு 295 சரக்கு பெட்டிகளில் 27 ஆயிரம் டன் நிலக்கரியை ஏற்றிக் கொண்டு, இந்த ரயில் சாதனைப் பயணத்தை மேற்கொண்டது.
இந்த ரயிலில் 6 என்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. முதலிலும் இறுதியிலும் இரு என்ஜின்களும் குறிப்பிட்ட இடைவெளிகளில் இடையிடையே மேலும் 4 என்ஜின்களும் பொருத்தப்பட்டிருந்தன.
"கோர்பா, நாகபுரி இடையிலான 267 கி.மீ. தொலைவை 11.20 மணி நேரத்தில் இந்த ரயில் கடந்தது; ஒரே பயணத்தில் சுமார் 9,000 டன் நிலக்கரியை (90 பெட்டிகளில் தலா 100 டன்கள்) எடுத்துச் செல்லும் சரக்கு ரயில்கள்தான் தற்போது உள்ளன.
"சூப்பர் வாசுகி ரயிலின் மூலம் மூன்று மடங்கு அதிக நிலக்கரியை எடுத்துச் செல்ல முடியும். 3,000 மெகாவாட் திறன்கொண்ட மின்உற்பத்தி ஆலைக்கு ஒரு நாள் முழுக்க தேவையான நிலக்கரியை இந்த ரயிலின் ஒரே பயணத்தின் மூலம் பூர்த்தி செய்துவிடலாம்" என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 10:18 pm
40 ஆண்டுகளுக்கு பிறகு எரிக்கப்பட்ட போபால் விஷவாயுக் கழிவுகள்
July 1, 2025, 9:49 pm
இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது
June 30, 2025, 7:17 pm
தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்
June 29, 2025, 6:15 pm
பூரி ஜெகந்நாதர் திருவிழாவில் அசம்பாவிதம்: ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர்
June 29, 2025, 6:07 pm
பிகாரில் இந்தியர்கள் என நிரூபிக்க கூடுதல் ஆவணம் கேட்கும் தேர்தல் ஆணையம்
June 29, 2025, 6:04 pm
சிந்து நதி நீர் பிரச்சனை: நடுவர் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
June 28, 2025, 6:28 pm
பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய கடற்படை ஊழியருக்கு தகவலுக்கு ரூ.50 ஆயிரம்
June 28, 2025, 2:27 pm
கலப்பட பெட்ரோல்: முதல்வரின் 10 வாகனங்களும் அடுத்தடுத்து நின்றன
June 28, 2025, 1:41 pm