செய்திகள் வணிகம்
சுற்றுலாத் துறை மூலம் 11.1 பில்லியன் ரிங்கிட் வருவாய்: அமைச்சர் எதிர்பார்ப்பு
கோலாலம்பூர்:
சுற்றுலாத் துறை மூலம் 11.1 பில்லியன் ரிங்கிட் வருவாய் எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சர் நான்சி ஷுக்ரி தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் 4.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மலேசியாவுக்கு 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அதன் அடிப்படையில் புதிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
"தொடக்கத்தில் நடப்பாண்டில் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலக்காகக் கொண்டிருந்தோம். ஆனால், ஆண்டின் பாதியிலேயே அந்த இலக்கு எட்டப்பட்டுவிட்டது.
"ஒருவேளை செப்டம்பர் மாதம் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். அவ்வாறு நிகழும் பட்சத்தில், இலக்குகள் அவ்வப்போது மாற்றி அமைக்கப்படும்," என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, நடப்பாண்டில் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் மூலம் அரசாங்கம் 6.8 பில்லியன் ரிங்கிட் வருவாயை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் நான்சி ஷுக்ரி தெரிவித்திருந்தார்.
கடந்த மாதம் வரை நாட்டிலுள்ள 15 ஆயிரம் சுற்றுலா முகவர்களுக்கு 23.8 மில்லியன் ரிங்கிட் நிதி உதவியாக வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 3:55 pm
மத்திய கிழக்கு யுத்தத்தால் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் கட்டுமான துறை உதவி கோருகிறது
March 26, 2026, 12:59 pm
30 ரிங்கிட் முதலீட்டில் RM40 மில்லியன் சொத்து சேர்த்த முன்னாள் ஹாக்கி கேப்டன்
March 25, 2026, 10:11 am
ஒரே வாரத்தில் RM82 ரிங்கிட் குறைந்த தங்க விலை: நகைக் கடைகளில் திரளும் மக்கள்
March 24, 2026, 5:13 pm
தேனீ வளர்ப்புத் தொழில் மூலம் ஆண்டுக்கு 25 லட்சம் ஈட்டும் கிராமத்துப் பெண்மணி
March 24, 2026, 3:44 pm
சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை கடும் வீழ்ச்சி: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி
March 24, 2026, 11:34 am
ஓய்வூதியச் சேமிப்பை இரட்டிப்பாக்க வழிமுறைகள்: நிபுணர்களின் ஆலோசனை
March 22, 2026, 5:35 pm
40 டிகிரி செல்சியஸ் வெப்பம்: கெடா மாநிலத்தில் இளநீர் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது
March 22, 2026, 11:25 am
வீட்டிலிருந்தே ஐந்து இலக்க வருமானம் ஈட்டும் இல்லத்தரசியின் சாதனை
March 22, 2026, 11:00 am
