செய்திகள் உலகம்
ஜப்பானில் சுற்றுப் பயணிகளுக்கு அனுமதி: பிரதமர் கிஷிடா அறிவிப்பு
டோக்கியோ:
ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால் உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன. தத்தம் நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில் ஜப்பானும் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு இரண்டு ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை ஜப்பான் நீக்கியுள்ளது.
இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறும்போது,
“அடுத்த மாதம் 10-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு வழிகாட்டப்பட்ட விதிமுறைகளின்படி சுற்றுலா பயணிகளின் அனுமதி வழங்குகிறோம். இதனைத் தொடர்ந்து நியூ சிட்டோஸ் விமான நிலையத்திலும், ஒகினாவாவில் உள்ள நஹா விமான நிலையத்திலும் சர்வதேச விமானங்கள் ஜூன் மாதம் முதல் தரையிறங்குவதற்கான ஏற்பாடுகள் தொடங்கும். படிப்படியாக சுற்றுலா பயணிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கு சுற்றுலா வருபவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும், பூஸ்டர் தடுப்பூசியையும் போட்டிருக்க வேண்டும் என்று ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
ஜப்பானில் இதுவரை 83 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
September 6, 2024, 10:13 pm
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சிங்கப்பூர் ஆதரவு
September 6, 2024, 9:40 pm
ஹசீனா வாய்மூடி அமைதியாக இருக்க வேண்டும்: முஹம்மது யூனுஸ் எச்சரிக்கை
September 5, 2024, 6:18 pm
வடகொரியாவில் வெள்ளத்தால் 4 ஆயிரம் பேர் பலி: அதிகாரிகளுக்கு மரண தண்டனை
September 5, 2024, 5:19 pm
சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் அமைக்கப்படும்: பிரதமர் மோடி
September 5, 2024, 4:49 pm
சீனப் பண்ணைகளில் கிருமிப் பரவல்
September 5, 2024, 10:29 am
கைப்பேசி பயன்பாட்டால் மூளை புற்றுநோய் ஏற்படாது: புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் தகவல்
September 4, 2024, 6:49 pm
ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் 50 பேர் பலி
September 4, 2024, 2:08 pm
விமானத்தின் முன்புறக் கண்ணாடியை சுத்தம் செய்யும் பைலட்
September 4, 2024, 12:58 pm
சிங்கப்பூரில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்ட ஆடவரை இந்தோனேசியா கைது செய்துள்ளது
September 4, 2024, 12:38 pm