நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கடும் மழை வீழ்ச்சி நிலவும் காலங்களில் இலங்கை பொத்தானை அணைக்கட்டை மீளமைக்க நடவடிக்கை தேவை: மு.கா.தலைவர் ஹக்கீம்

கொழும்பு:

இலங்கையில், கடும் மழை வீழ்ச்சி நிலவும் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில், கல்குடா தொகுதியில் உள்ள பொத்தானை அணைக்கட்டு உடைப்பெடுப்பதன் விளைவாக, விவசாயிகளுக்குச் சொந்தமான  250 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்கள் பாதிக்கப்படுவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமிடம் சுட்டிக்காட்டப்பட்டதைத் தொடர்ந்து, அது சம்பந்தமான நடவடிக்கைகளை  இலங்கை நீர்பாசனத் திணைக்களத்துடனும், இதனோடு சம்பந்தப்பட்ட இதர தரப்பினருடனும் துரிதமாக மேற்கொள்ளும் பொறுப்பை கட்சியின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் அவர் ஒப்படைத்துள்ளார்.

இலங்கையில் நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து, கல்குடா தொகுதியில், செம்மண்ணோடை மாவடிச்சேனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரக்குழுவின் ஏற்பாட்டில், எழில் மிகு பொத்தானை அணைக்கட்டுப் பிரதேசத்தில் கோரளைப்பற்று, (வாழைச்சேனை ) பிரதேச சபை உறுப்பினர் ஏ .எல். ஏ கபூர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை  (25) பகல் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்திலும், விருந்தோம்பல் நிகழ்விலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அங்கு வருகை தந்தபோதே, அந்த பிரதேசத்தை அவர் நேரில் பார்வையிட்ட பின்னர் இதனை அறிவித்தார்.

கட்சியின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ .எம். ஹிஸ்புல்லாஹ், முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் எம் .எஸ். நழீம், கல்குடா தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி ஹபீப் ரிபான், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், கோறளைப் பற்று, கோறளைப்பற்று மேற்கு, கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபைகள், ஏறாவூர் நகர சபை ஆகியவற்றின் உறுப்பினர்கள், வேட்பாளர்கள், முக்கியஸ்தர்கள் ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

- ஏ. ஆர். ஏ. ஹஃபீஸ்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset