நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உட்லண்ட்ஸ், துவாஸ் எல்லைகளில் வரிசையை முந்திச் செல்லும் ஓட்டுநர்கள் நிலவழி சோதனைச்சாவடிகளைக் கடக்கத் தடை விதிக்கப்படலாம்

கோலாலம்பூர்: 

சிங்கப்பூரிலிருந்து மலேசியா செல்லும் உட்லண்ட்ஸ், துவாஸ் நிலவழி எல்லைகளில் நேரத்தை மிச்சப்படுத்த  வரிசையை முந்திச் செல்லும் வாகனமோட்டிகளின் பயணம் தடை செய்யப்படலாம் என்று சிங்கப்பூர்  சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வரிசையை முந்திச்செல்லும் ஓட்டுநர்களைக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் நிறுத்தக்கூடும். யு-டர்ன் (u-turn) செய்து மீண்டும் வரிசையில் சேர்ந்துகொள்ளுமாறு அதிகாரிகள், அந்த ஓட்டுநர்களுக்கு உத்தரவிடக்கூடும்.

சில ஓட்டுநர்கள் தவறு இழைத்தோர் பட்டியலில் சேர்க்கப்படலாம் (blacklisted), அவர்கள் மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்படலாம்.

அதற்கு இணங்காத ஓட்டுநர்களுக்கு நிலவழி சோதனைச்சாவடிகளைக் கடக்கத் தடை விதிக்கப்படலாம்.

இவ்வாண்டின் ஜுன் பள்ளி விடுமுறைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் நிலவழி எல்லைகளில் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணம் சுமுகமாக இருக்கப் போக்குவரத்து ஒழுங்குமுறையைப் பின்பற்றுமாறு குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் வாகன ஓட்டிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset