நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விமான நிலையத்தின் பெண்ணின் முக ஒப்பனையைக் கலைக்க சொன்ன அதிகாரிகள்

ஷங்ஹாய்:

சீனாவின் ஷங்ஹாய் நகரிலுள்ள விமான நிலையத்தில் அங்க அடையாளச் சோதனையைக் கடக்க முடியாததால் பெண்ணின் முக ஒப்பனைகயைக் கலைக்க கூறிய குடிநுழைவு துறை அதிகாரிகள் தொடர்பான சம்பவம் சமூக ஊடகத்தில் வைரலானாது. 

சமூக ஊடகத்தில் பதிவிடப்பட்டிருந்த காணொலியில் முக அடையாளத்தைக் காட்டும் கருவி அப்பெண்ணின் முகத்தை அடையாளக் காண இயலவில்லை என்பதால் அவர் அணிந்திருந்த ஒப்பனையைக் கலைக்க குடிநுழைவு துறை அதிகாரி கூறுவது பதிவாகியுள்ளது. 

கடப்பிதழிலுள்ள புகைப்படம் போல் இருந்தால் மட்டுமே முகத்தை அடையாளம் காண முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெட்கம் மிகுந்த முகத்துடனுடனும் கண் கலங்கியப்படி அந்தப் பெண் ஒப்பனையை கலைத்துள்ளார். 

இறுதியில் அவர் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இக்காணொலி தொடர்பாக சிலர் அந்தப் பெண்ணை கேலி செய்து பதிவிட்டுள்ள நிலையில் சிலர் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாகப் பதிவிட்டனர். 

அங்க அடையாளக் கருவி பழுதடைந்திருக்கலாம் என சிலர் குறிப்பிட்டனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset