நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் செந்தோசாவில் புதுப்பிக்கப்பட்ட கடல்வாழ் உயிரினக் காட்சியகம் விரைவில் திறக்கப்பட உள்ளது

சிங்கப்பூர்:

செந்தோசாவில் புதிய சிங்கப்பூர் கடல்வாழ் உயிரினக் காட்சியகம் ஜூலை 23ல் திறக்கப்படுகிறது.

மூன்று மாதப் புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு பொதுமக்களை வரவேற்கக் காட்சியகம் தயாராக உள்ளது.

பழைய காட்சியகத்தைவிட புதிய காட்சியகம் மும்மடங்கு பெரிது.

அதில் 22 பிரிவுகள் இடம்பெறும் என்று அதனை நிர்வகிக்கும் ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா திங்கட்கிழமை  தெரிவித்துள்ளது.

கடலின் பல்வேறு பகுதிகளைக் காட்சியகத்துக்குச் செல்பவர்கள் கண்டு மகிழலாம்.

ஜெல்லிமீன் போன்ற கடல்வாழ் உயிரினங்களை உள்ளடக்கக்கூடிய சிறப்புத் தொட்டியை காட்சியகத்தின் அம்சங்களில் ஒன்றான ‘ஓஷன் வண்டர்ஸ்’ கொண்டிருக்கும்.

சதுப்புநில நிலப்பரப்புகளையும் உள்ளூர் உயிரினங்களை மையமாகக் கொண்ட இருவழித் தொடர்பு வாழ்விடத்தை ‘Singapore’s Coast’ அம்சம் காட்டும்.

ஆழ்கடல் பிரிவில் ரீவ் மான்டா ரேஸ், ஸீப்ரா சுறாமீன்கள் போன்றவற்றைப் பொதுமக்கள் பார்க்கலாம். இப்பிரிவில் 35 மீட்டர் அகலமுள்ள பார்வையாளர் கண்ணாடிக்கு முன் நின்று ஆழ்கடல் பகுதியில் நீந்தும் ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களைக் காணலாம்.

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset