
செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஆம்பூரில் பிரியாணித் திருவிழா நாளை துவங்குகிறது
ஆம்பூர்:
ஆம்பூர் பிரியாணி, ஆளைத்தூக்கும் அளவுக்கு கமகமக்கும். ஆம்பூர் பிரியாணியை ருசிக்கவே நாக்கிற்குக் கொடுப்பினை இருக்க வேண்டும் என்பார்கள் அசைவப் பிரியர்கள்.
இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டில் நடக்கும் தக்காளி திருவிழாவின் மாடலில், ஆம்பூர் பகுதியிலிருக்கும் அனைத்து பிரியாணிக் கடைகளையும் ஒன்றுசேர்த்து, பிரியாணித் திருவிழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்திருக்கிறது திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம்.
ஆம்பூர் வர்த்தக மையத்தில், வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் பிரியாணி திருவிழா நடைபெறுகிறது. 13-ம் தேதியான வெள்ளிக்கிழமையும், 14-ஆம் தேதியான சனிக்கிழமையன்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திருவிழா நடக்கிறது.
அதேபோல, 16-ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், அன்றைய நாளில் மட்டும் மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை பிரியாணியை ருசித்து சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
30-க்கும் மேற்பட்ட அரங்குகள், 20-க்கும் அதிகமான பிரியாணி வகைகள் என பிரியாணி திருவிழா களைகட்டவிருக்கிறது. பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம். நுழைவுக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
‘‘மனித ஒருமைப்பாட்டுக்காக பிரியாணி திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் மகிழ்ச்சியாகக் கூடி ஆளுக்கொரு பிடி எடுத்து சாப்பிட ரெடியா?’’ என அழைப்பு விடுத்திருக்கிறார் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா.
தொடர்புடைய செய்திகள்
May 23, 2022, 7:58 pm
என்னால் இட்லி சாப்பிட முடியல; நான் இறக்கவில்லை; சமாதி நிலையில் உள்ளேன்: நித்யானந்தா
May 22, 2022, 4:51 pm
பழங்குடியின மக்களை அரசு பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்
May 19, 2022, 3:10 pm
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் சிங்களர்கள் அஞ்சலி
May 18, 2022, 2:38 pm
பேரறிவாளன் விடுதலை: வைகோ மகிழ்ச்சி
May 17, 2022, 7:09 pm
ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை
May 13, 2022, 6:07 pm