நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சவூதி அரேபியாவின் ரியாத்தில் பலத்த வெடி சத்தம்: வான்வழி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது 

ரியாத்: 

சவூதி அரேபியா நாட்டின் தலைநகரமான ரியாத்தில் இன்று காலை சனிக்கிழமை பலத்த வெடி சத்தம் ஒன்று கேட்டதாக தெரிவிக்கப்பட்டது 

இதனை தொடர்ந்து அங்கு வான்வழி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன 

ஈரான் ஆதரவு படையான ஹௌதி படையினரை உட்படுத்தியதாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக சவூதி அரேபியா அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது 

ரியாத்தில் இதுபோன்ற சம்பவமும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும் 

ஒரே நகரத்தில் வெவ்வேறு இடங்களில் இந்த வெடி சத்தங்கள் கேட்கப்பட்டதாக ஏ.ஃப் பி ஊடகவியலாளர் ஒருவர் கூறினார். 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சவூதி அரேபியா அதன் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்தியுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset