நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஏமன் உள்நாட்டுப் பூசல்: வாழ வழிதேடி இடம்பெயரும் மக்கள்

சனா:

ஏமனின் உள்நாட்டுப் பூசலால் இந்த மாதத் தொடக்கம் முதல் 125,000 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இம்மாதம் தொடக்கத்தில் இருந்து பொதுமக்களில் எட்டு பேர் மாண்டனர்.

சுமார் 32 பேர் காயமடைந்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருள்கள் மிகவும் குறைவாக இருப்பதாய் ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறியது.

பாதுகாப்புச் சூழல் மோசமாக இருப்பதால், சில பகுதிகளுக்கு உதவிப் பொருள்களைக் கொண்டுசெல்வதும் தடைப்பட்டிருப்பதாக அது சொன்னது.

பொதுமக்களைப் பாதுகாத்து, நிவாரண உதவிகள் தடையின்றிச் சென்றடைய அனுமதிக்க வேண்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் வலியுறுத்தியது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset