நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நகைக் கடையில் இரண்டாவது முறையாகக் கொள்ளை: 1 மில்லியன் ரிங்கிட் இழப்பு என மதிப்பிடப்பட்டுள்ளது

சுங்கைப்பட்டாணி:

சுத்தியல்கள், கூர்மையான ஆயுதங்களுடன் வந்ததாக நம்பப்படும் முகமூடி அணிந்த நான்கு நபர்கள், நேற்று இரவு இங்குள்ள ஒரு வணிக வளாகத்தில் இருந்த தங்கக் கடையைக் கொள்ளையடித்தனர்.

நேற்று மாலை 7.20 மணிக்கு நடந்த இந்தக் கொள்ளையில், இரண்டு சந்தேக நபர்கள் கடைக்குள் நுழைந்து, மூன்று காட்சிப் பெட்டிகளின் கண்ணாடிகளை உடைத்து, பல்வேறு நகைகளைத் திருடிச் சென்றனர்.

இந்தச் சம்பவம் நடந்த உடனேயே பொதுமக்களிடமிருந்து தமக்கு அழைப்பு வந்ததாக கோலா மூடா மாவட்ட போலிஸ் தலைவர் ஹன்யான் ராம்லான் கூறினார்.

நகைக் கடைக்குள் நுழைந்த இரண்டு சந்தேக நபர்களும் தங்கப் பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றதாகவும், அவர்களது இரண்டு நண்பர்கள் கடையிலிருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில் காத்திருந்ததாகவும் அவர் கூறினார்.

உண்மையான இழப்பு இன்னும் விசாரணையில் உள்ளது. மேலும், 700,000 ரிங்கிட் முதல் 1 மில்லியன் ரிங்கிட் வரையிலான தொகையானது, சம்பந்தப்பட்ட தங்கக் கடையின் உரிமையாளர் அளித்த ஒரு முதற்கட்ட மதிப்பீடாகும்.

உண்மையான இழப்பின் அளவைத் தீர்மானிக்க, அந்த வளாகத்திலிருந்து காணாமல் போன நகைகளின் முழுமையான பட்டியலுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம், என்று நேற்று இரவு சம்பவம் நடந்த இடத்தில் சந்தித்தபோது அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset