நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாடு முழுவதும் 28 இடங்களில் காற்றின் தரக்குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு 

கோலாலம்பூர்: 

நாடு முழுவதும் 28 இடங்களில் காற்றின் தரக்குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது 

காலை 9.45 மணியளவில் இந்த நிலை நீடிப்பதாக மலேசிய காற்று குறியீடு நிர்வாக அமைப்பு தெரிவித்தது 

பேராக் மாநிலத்தில் ஐந்து இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவானது. குறிப்பாக, தாசெக், ஶ்ரீ மஞ்சோங், பெகோ, தைப்பிங் மற்றும் தஞ்சோங் மாலிம் ஆகிய பகுதிகளாகும். 

பினாங்கு மாநிலத்தில் செபெராங் ஜெயா, பாலிக் புலாவ் பகுதிகளும் சிலாங்கூரில் ஜொஹான் செத்தியா, பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலாம் ஆகிய பகுதிகளும் காற்றின் தரம் 100க்கு மேல் பதிவாகி ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது. 

தலைநகரில், செராஸ் (157) மற்றும் பத்து மூடா (155) இல் ஆரோக்கியமற்ற அளவீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் புத்ராஜெயா (157) மற்றும் நெகிரி செம்பிலானில், நீலாய் (157) மற்றும் சிரம்பன் (151) பதிவு செய்யப்பட்டன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset