செய்திகள் உலகம்
தாய்லாந்து-கம்போடிய எல்லையில் 8.4 கிலோமீட்டர் நீளமான சுவரை அமைக்கும் தாய்லாந்து
சந்தபுரி:
தாய்லாந்து கம்போடியாவுடனான எல்லையில் புதிய சுவரைக் கட்டத் தொடங்கியிருக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையே சென்ற ஆண்டு மூண்ட போரைத் தொடர்ந்து தாய்லாந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது.
புதிய சுவரின் நீளம் 8.4 கிலோமீட்டர். அதன் உயரம் 3.6 மீட்டர்.
ஒரு கிலோமீட்டர் நீளமுடைய பாகம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. அதன்மேல் கூர்மையான முள்வேலி பொருத்தப்பட்டிருக்கிறது.
எல்லையைத் தாண்டி பொருள்களையும் ஆள்களையும் சட்டவிரோதமாகக் கடத்தும் நடவடிக்கையை முடக்கச் சுவர் கட்டப்படுவதாகத் தாய்லாந்துக் கடற்படைத் தலைவர் கூறினார்.
டிசம்பரில் இரு நாடுகளும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இருப்பினும் ஒப்பந்தத்தை மீறியதாகத் தாய்லாந்தும் கம்போடியாவும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டுகின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 9:51 pm
நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதல்: 25 ஆண்டுகள் நிறைவு
September 11, 2026, 7:21 am
சரக்கு கப்பலில் தீ: 25 பேர் கருகி பலி
September 10, 2026, 11:36 am
வங்கதேசத்தில் தீவிரம் காட்டும் தட்டம்மை: 999 போ் உயிரிழப்பு
September 10, 2026, 9:14 am
இஸ்லாமியச் சமயக் கல்விக்கு செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தலாமா?
September 10, 2026, 8:26 am
உலகிலேயே அதிக சம்பளம் பெறும் சிங்கப்பூர் பிரதமர்
September 10, 2026, 8:00 am
