நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் வேலை வாய்ப்பு கண்காட்சியின் வேலை வாய்ப்புகளை இந்திய இளைஞர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: பாப்பா ராய்டு

சிப்பாங்:

சிலாங்கூர் வேலை வாய்ப்பு கண்காட்சியில் 28 நிறுவனங்கள் பங்கேற்பில் சுமார் 3,925 வேலை வாய்ப்புகளை சிப்பாங் மாவட்ட ரீதியில் இருக்கும் வேலை தேடி வரும் இளைஞர்களுக்கான திட்டத்தை மாநில அரசு முன்னெடுத்துள்ளது.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமான் இதனை தெரிவித்தார்.
சிப்பாங் கோத்தா வாரிசான் கேஐபி மாலில் நடைபெற்ற மாநில அரசின் வேலை வாய்ப்பு கண்காட்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

சிப்பாங் மாவட்ட கெர்ஜாராயா துணையுடன் இந்த நடவடிக்கை வெற்றிகரமாக நடைபெற்றது.

பல முன்னோடி நிறுவனங்களின் அதிகாரிகள், வேலை வாய்ப்புகளை தேடி வந்த இளைஞர்களுக்கு நேர்காணலை நடத்தினர்

வேலை வாய்ப்புகளைப் பெற்ற இளைஞர்கள், 2,500 ரிங்கிட்டும் இன்னும் கூடுதலான ஊதியத்தைப் பெற்று தங்களது குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும், எதிர்காலத்தை பலப் படுத்திக் கொள்ளவும் சிலாங்கூர் மாநில வேலக் வாய்ப்பு கண்காட்சி நிச்சயம் தொடர்ந்து கை கொடுத்து உதவிடும் என்று தாம் பெரிதும் நம்பிக்கை வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset