நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ரஷ்யாவில் பொது இடத்​தில் மது அருந்​தி, ஆம்புலன்ஸ் கண்​ணாடியை உடைத்​த​ சந்​தன் குப்தா, அவரது நண்​பர் ஆஷிஷ் இரு​வரை​யும் ரஷ்ய காவல்துறையினர் கைது செய்தனர்: கணவரை மீட்டுத்தர மோடிக்கு காணொலி அனுப்பிய மனைவி  

புதுடெல்லி: 

மாஸ்​கோ​வில் ரஷ்ய காவல்துறையினரால் கைது செய்​யப்​பட்​டுள்ள கான்​பூரைச் சேர்ந்த இந்தியப் பொறியாளர் ஒரு​வரை, அந்​நாட்டு ராணுவத்​தில் கட்​டாய​மாக சேர்க்க முயற்சி நடப்​ப​தாக அவரது மனைவி குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

உத்​தரப் பிரதேசம் கான்​பூரைச் சேர்ந்த பொறி​யாளர் சந்​தன் குப்தா, நொய்டா நிறு​வன​மான ஃபிளெக்ஸ் ஃபிலிம்​ஸின் மாஸ்கோ கிளை​யில் பணி​யாற்றி வரு​கிறார். தனது மனைவி ஸ்நேகா குப்தா, 10 வயது மகனுடன் அவர் மாஸ்​கோ​வில் வசித்து வரு​கிறார். 

கடந்த செப்​டம்​பர் 5-ம் தேதி இரவு, மாஸ்கோவின் சிவப்பு சதுக்க பகு​தி​யில் பொது இடத்​தில் மது அருந்​தி, ஆம்புலன்ஸ் கண்​ணாடியை உடைத்​த​தாக சந்​தன் குப்தா, அவரது நண்​பர் ஆஷிஷ் இரு​வரை​யும் ரஷ்ய காவல்துறையினர் கைது செய்​தனர்.

தனது கணவரை உக்​ரைன் போரில் பங்​கேற்க அவரை ரஷ்ய ராணுவத்​தில் சேரு​மாறு காவல்​துறை​யினர் கட்​டாயப்​படுத்​து​வ​தாக அவர் மனைவி குற்​றம் சாட்​டி​னார். தன் கணவரைப் பாது​காப்​பாக மீட்க பிரதமர் நரேந்​திர மோடி​யும் உத்தரப் பிரதேச முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத்​தும் உடனடி​யாகத் தலை​யிட வேண்​டும் எனக் கண்​ணீருடன் காணொலி மூலம் வேண்​டு​கோள் விடுத்​தார்.

இதுகுறித்து தகவல் தெரி​வித்த அரசு வட்​டாரங்​கள், மாஸ்​கோ​வில் உள்ள இந்​திய தூதரகம் சந்​தன் குப்தா, ஆஷிஷை விடுவிக்க உள்​ளூர் அதி​காரி​களிடம் சந்​திக்க அனு​மதி கோரி​யுள்​ள​தாக​வும் தெரி​வித்​தன. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset