நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

டில்லியில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது; மூவர் மரணம்: பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்

டில்லி:

டில்லியின் தென்மேற்கு பகுதியில் உள்ள சத்ய நிகேதன் பகுதியில் இன்று மதியம் 6 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுவரை மூன்று பேர் மரணமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த கட்டிடம் 75 பேர் தங்கும் வகையிலான வாடகை விடுதியாக செயல்பட்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதியம் சுமார் 1.30 மணியளவில் கட்டிடம் இடிந்து விழுந்தது.

தகவல் அறிந்ததும் டில்லி போலீசார், தீயணைப்புப் படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், அவசரகால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் இருந்து இதுவரை 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 3 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டில்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்துக்கு அருகே சத்ய நிகேதன் பகுதி அமைந்துள்ளதால், அங்கு ஏராளமான மாணவர்கள் தங்கியுள்ளனர்.

கட்டிடம் இடிந்தபோது அதற்குள் சுமார் 50 மாணவர்கள் இருந்திருக்கலாம் என நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset