நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மாநில சட்டமன்றம் அம்னோ பொதுப்பேரவைக்குப் பிறகு கலைக்கப்படலாம்: அஹ்மத் ஸாஹித் ஹமிடிநம்பிக்கை 

கோலாலம்பூர்: 

மலாக்கா மாநில சட்டமன்றம் அம்னோ பொதுப்பேரவைக்குப் பிறகு கலைக்கப்படலாம் என்று அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி கோடிக்காட்டினார். 

2026 அம்னோ பொதுப்பேரவை செப்டம்பர் 9 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது 

மலாக்கா மாநில தேர்தலில் தேசிய முன்னணி, அம்னோ தொடர்ந்து 21  சட்டமன்ற இடங்களைத் தக்கவைத்து கொள்ளும் என்று அஹ்மத் ஸாஹித் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தற்போது தேசிய முன்னணி நம்பிக்கை கூட்டணியுடனும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியுடனும் அதிகாரப்பூர்வமற்ற தேர்தல் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதையும் அவர் உறுதிப்படுத்தினார். 

மலாக்கா மாநில சட்டமன்றம் இவ்வாண்டு டிசம்பர் மாதம் இறுதியுடன் அதன் தவணைக்காலம் முடிவடைகிறது. 

முன்னதாக, மலாக்கா மாநில சட்டமன்றம் இம்மாதம் கலைக்கப்பட்டு அக்டோபர் மாதம் மாநில சட்டமன்ற தேர்தல் நடத்தப்படலாம் என்று இதற்கு மலாக்கா மாநில முதலமைச்சர் அப்துல் ரவுஃப் யூசோஃப் கூறியிருந்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset