செய்திகள் மலேசியா
இருதய நோய் மருந்துகளால் தூக்கக் கலக்கத்தில் இருந்த ஓட்டுநரால் பேருந்து விபத்துக்குள்ளானது
தாப்பா:
இருதய நோய்க்கான மருந்துகளின் தாக்கத்தால் பேருந்து ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததாகக் கருதப்படுகிறது.
இதன் காரணமாக இன்று இங்குள்ள வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையின் பீடோர்-தாப்பா அருகே பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மையத்தடுப்பில் மோதியது.
தாப்பா மாவட்டக் போலிஸ் தலைவர், அப்துல் மாலிக் ஹசிம், மதியம் சுமார் 12.30 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்த தகவல் தமது துறைக்குக் கிடைத்ததாகக் கூறினார்.
சிலாங்கூர் காஜாங்கிலிருந்து கெடா, கூலிமிற்கு பயணிகள் இல்லாமல் பேருந்து சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக ஆரம்பகட்ட காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்தபோது, வலதுபுறப் பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதியதாக நம்பப்படுகிறது.
பேருந்து ஓட்டுநருக்குக் காயமில்லை என்றும், அவர் சிகிச்சைக்காக தபா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது என அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 2, 2026, 10:37 pm
மானியமில்லா பெட்ரோல், டீசல் விலைகள் 5 சென் குறைகிறது
September 2, 2026, 10:36 pm
பள்ளிகளில் இனி அழகான போட்டிகளுக்கு இடமில்லை; ஆசிரியர்கள் மீண்டும் கற்பித்தலில் கவனம் செலுத்த வேண்டும்: ஃபட்லினா
September 2, 2026, 10:36 pm
நாட்டில் மேலும் அந்நியத் தொழிலாளர்கள் தேவையில்லை: டத்தோஸ்ரீ ரமணன்
September 2, 2026, 6:26 pm
பாராங் கத்தியை பயன்படுத்தி கலவரம்: நான்கு நண்பர்களுக்கு 2,900 ரிங்கிட் அபராதம்
September 2, 2026, 5:46 pm
இந்தோனேசியா சினபுங் எரிமலை வெடிப்பு: 600க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
September 2, 2026, 5:25 pm
