நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஃபெல்டா, துணை நிறுவனங்கள் உட்படுத்திய ஊழல் விவகாரம்: ஏழு விசாரணை அறிக்கைகளைத் திறந்தது எம்.ஏ.சி.சி 

பெட்டாலிங் ஜெயா: 

ஃபெல்டா, அதன் சார்ந்த துணை நிறுவனங்களை உட்படுத்திய ஊழல், அதிகார துஷ்பிரயோகம், நிதி முறைக்கேடு தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஏழு விசாரணை அறிக்கைகளை திறந்துள்ளது 

2010 முதல் 2020ஆம் ஆண்டு வரை ஏற்பட்ட பணபரிவர்த்தனைகள், முதலீட்டு நடவடிக்கைகள் குறித்து பெரிய அளவிலான விசாரணைகள் தீவிரம் காட்டப்படும் என்று எம்.ஏ.சி.சி தலைமை ஆணையர் அப்துல் ஹலிம் அமான் கூறினார். 

கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி ஆறு விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்ட நிலையில் ஒரே ஒரு விசாரணை அறிக்கை திறக்கப்பட்டது இன்னும் இருக்கிறது என்று விளக்கமளித்தார். 

தவறான நிர்வாகம் மற்றும் அதீத அரசியல் தலையீடு காரணமாக ஃபெல்டா நிறுவனம் கிட்டத்தட்ட 10 பில்லியன் ரிங்கிட் இழப்பைச் சந்தித்துள்ளதாக கடந்த மாதம் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.

ஃபெல்டா அமைப்பு எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்த கண்டுபிடிப்புகள் அடங்கிய, அந்த அமைப்பு மீதான ஒரு சிறப்புப் பணிக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் விரைவில் வெளியிடும் என்றும் அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset