செய்திகள் தமிழ் தொடர்புகள்
மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் விமான நிலையம் அமைக்க வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்
சென்னை:
“தமிழகத்தின் வளர்ச்சிக்கு புதிய விமான நிலையம் தேவை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எனவே, பொது மக்கள் பாதிப்பு அடையாமல் புதிய இடத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது,
“புதிய விமான நிலையத்துக்கான இடத்தை தேர்வு செய்யும்போதும் அப் பகுதி மக்களின் கருத்துகளை கேட்க வேண்டும். காடுகளை அழிக்க வேண்டிய நிலையும், நீர்நிலைகளை தூர்வார வேண்டிய நிலையும் ஏற்படக்கூடும்.
இருந்தபோதிலும் விமான நிலையம், துறைமுகம், ரயில் நிலையம் உள்ளிட்ட போக்குவரத்து, கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதன் மூலமே மாநிலத்தின்முன்னேற்றத்துக்கு தேவையான வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்.
எனவே, தமிழகத்தின் வளர்ச்சிக்கு புதிய விமான நிலையம் தேவை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதேவேளையில் பொது மக்களின் இசைவைப் பெற்று, அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 4:12 pm
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
August 22, 2026, 4:35 pm
திமுகவில் மாற்றங்களை செய்த ஸ்டாலின்: 9 அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றம்
August 21, 2026, 9:23 pm
“கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை குறுவை தொகுப்பில் காட்டாதது ஏன்?”: உதயநிதி கேள்வி
August 20, 2026, 11:53 am
பிரதமர் மோடி அமைச்சரவையில் 20 பேர் இலாகா விரைவில் மாற்றம்: புதிதாக திமுகவும் இடம்பெற இருப்பதாக தகவல்
August 18, 2026, 1:05 pm
