செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
சென்னை:
சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று செவ்வாய்க்கிழமை (ஆக. 18) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டல பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக. 18) ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
தொடா்ந்து, நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் புதன்கிழமை (ஆக. 19) ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை, புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 18), வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
7 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 103.46 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை விமான நிலையம் - 102.2, நாகை - 100.76, திருத்தணி, வேலூா் - 100.58, தஞ்சாவூா் - 100.4, மதுரை நகரம் - 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 17, 2026, 6:34 pm
அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்
August 16, 2026, 11:31 am
தகைசால் தமிழர் விருது காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு முதல்வர் விஜய் வழங்கினார்
August 15, 2026, 11:38 am
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம்: முதல் முறையாக தேசியக் கொடியேற்றினார் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய்
August 13, 2026, 5:22 pm
5 மணி நேரமாக ஆலோசனை நடத்திய அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள்
August 12, 2026, 12:46 pm
சென்னை கடற்கரை உட்பட 44 இடங்களில் இலவச வைஃபை வசதி: தமிழக அரசு உத்தரவு
August 11, 2026, 9:58 am
