நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்: சட்டப் பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னை:

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்தார். மேலும், ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.

“கடந்த 4 மாதங்களாக வளைகுடாவில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இதனால் மக்களின் செலவு கூடியுள்ளது.

அதைக் கருத்தில் கொண்டு மக்களின் நிதிச்சுமையை குறைக்கும் வகையிலும், மக்கள் நலனை பாதுக்காகவும், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கிலும், எரிவாயு சிலிண்டருக்கான செலவழிக்கப்படும் தொகையினை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

எரிவாயு சிலிண்டருக்கு விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டம் மூலம் 1.30 கோடி குடும்பங்கள் பயனடைவார்கள்” என்று முதல்வர் விஜய் தெரிவித்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset